Tuesday, July 10, 2018

சொரியஸ் , நரம்பு_சுருட்டல் ?

இதற்கு மற்றும் ஒரு மருத்துவம் உண்டு.

கழற்சிக்காய் -1,
மிளகு-5

போதுமானது.

*** மருந்து உட்கொள்ளும் முறை ***

ஒரு கழற்சிக்காயை உடைத்து உள்ளிருக்கும் பருப்பு மட்டும் எடுத்துக்கொள்ளவும். அதோடு 5மிளகு சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவேண்டும். மிகவும் கசப்பாக இருக்கும் பொறுத்துக்கொள்ளவும்.இம்மருந்தை காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். காலை என்பது தூங்கி எழுந்து பல் துலக்கியவுடன் சாப்பிடவேண்டும்.மருந்து உட்கொண்ட பின் அரை மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது.மாலை என்பது 4 to 6 மணிவரை இந்த நேரத்தில் வயிறு காலியாக இருக்கும். இதற்கு பத்தியம் இல்லை. ஆனால் மது, புகை அறவே கூடாது. இம்மருந்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) சாப்பிடவேண்டும்.வெரிகோஸ் வெயின் இருப்பவர்கள் கழற்சிக்காயையும், மிளகையும் எப்போதும் பையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. உடனடி நிவாரணம் கிடைக்கக்கூடியது. எனது அனுபவத்தில் சொல்கிறேன்.


*** நரம்பு_சுருட்டல் ?

#varicosisveins
#_வெரிக்கோசிஸ்வெயின்

#இதனை_கவனிக்காமல் #விட்டால்……!!!! ?????

நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு 
(#varicosis #veins)என்கிறோம். இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். 

பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும்.

பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும். 10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும், சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது. குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது. தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள்.

நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும். இதனையே #வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். 

#காரணங்கள்: 

அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை. #ரத்தநாளங்களில் உள்ள #வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி தளதளஎன ஆகிவிடுகிறது.
வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம். 

#அறிகுறி:

இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும். சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் #மரத்து போகும் நிலை ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் #குழாய் #வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (#eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்னை ஏற்படும். 

கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் #வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். 

#நோயினால்_வரும் #பிரச்னைகள்: 

தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும். டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும்.

இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் #இருதயம் மற்றும் #மூளையில் #அடைப்பை ஏற்படுத்த #வாய்ப்புண்டு.

#நோய்க்கான_மருந்து !

#இரத்தநாளவீக்க_நோய் #கசாயம் !!

வல்லாரைக் கீரை ......... ஒரு கைப்பிடி 

நெருஞ்சில் ........... ஐந்து கிராம் 

கருஞ்சீரகம் ........... ஐந்து கிராம்

சீரகம் ........... ஐந்து கிராம்

சுக்கு ........... ஐந்து கிராம்

மிளகு ........... ஐந்து கிராம்

திப்பிலி ........... ஐந்து கிராம்

ஆகிய ஆறு பொருட்களை சம அளவு எடுத்து லேசாக வெதுப்பி ஒன்றிரண்டாக இடித்து மண் சட்டியில் போட்டு 
அத்துடன் ஒரு கைப்பிடி வல்லாரைக் கீரை போட்டு 
ஐநூறு மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கசாயமாக்கி நூறு மில்லியாக சுருக்கி குடித்து வர வெரிகோஸ் வெயின் என்ற இரத்த நாள வீக்க நோய் படிப்படியாகக் குணமாகும்.

தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும் ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிட வேண்டும்.

♦மருதம் பட்டை சூரணம் காலை & மாலை 1/2 கி தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிடவும்.

No comments:

Post a Comment