*** முகத்தில் வரும் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் நீங்குவதற்கு
சிலருக்கு முகத்தில் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் வரும். இதற்கு கண்டகண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.
**முகப்பரு நீங்க :
* புதினா இலையை அரைத்து, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் முகப்பரு நீங்கும்.
* தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை சமமான அளவில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு குறையும்.
**முகத்தில் கட்டிகள் குறைய :
* சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்
***முகத்தில் கரும்புள்ளிகள் குறைய :
* கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.
* சிறிதளவு கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயத்தம் பருப்பு மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.
ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள்,பருக்களை இயற்கையான முறையில் போக்க சூப்பர் டிப்ஸ்!
அக்காலத்தில் நம் பாட்டிமார்கள் அழகு நிலையங்களுக்குச் சென்றா, தங்களது அழகைப் பராமரித்தார்கள். நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தங்கள் அழகைப் பராமரித்தார்கள். இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியதால், அவர்களது சருமம் பல வருடங்களுக்கு இளமையுடனும், எவ்வித பிரச்சனை இல்லாமலும் இருந்தது.
இக்கட்டுரையில் நம் முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பல வருடங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.
பெர்ரி ஜூஸ்
கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.
பூண்டு
பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
ஜிங்க் மற்றும் செலினியம்
ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அனைவருக்கும் பகிருங்கள்
சிலருக்கு முகத்தில் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் வரும். இதற்கு கண்டகண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.
**முகப்பரு நீங்க :
* புதினா இலையை அரைத்து, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் முகப்பரு நீங்கும்.
* தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை சமமான அளவில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு குறையும்.
**முகத்தில் கட்டிகள் குறைய :
* சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்
***முகத்தில் கரும்புள்ளிகள் குறைய :
* கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.
* சிறிதளவு கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயத்தம் பருப்பு மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.
ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள்,பருக்களை இயற்கையான முறையில் போக்க சூப்பர் டிப்ஸ்!
அக்காலத்தில் நம் பாட்டிமார்கள் அழகு நிலையங்களுக்குச் சென்றா, தங்களது அழகைப் பராமரித்தார்கள். நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தங்கள் அழகைப் பராமரித்தார்கள். இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியதால், அவர்களது சருமம் பல வருடங்களுக்கு இளமையுடனும், எவ்வித பிரச்சனை இல்லாமலும் இருந்தது.
இக்கட்டுரையில் நம் முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பல வருடங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.
பெர்ரி ஜூஸ்
கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.
பூண்டு
பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
ஜிங்க் மற்றும் செலினியம்
ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அனைவருக்கும் பகிருங்கள்
No comments:
Post a Comment