Tuesday, July 10, 2018

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற

**** நண்பர்களே மழைகாலங்களில் மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இந்த முயற்சியை செய்யுங்கள் ****

1. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்

2. தரையிலிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள்(ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு மட்டும்)

3. துளைகளுக்கு 1 இன்ச் கீழ் வரை நீரை நிரப்பிக் கொள்ளவும்.

4. 10-15 கிராம் அளவில் கருவாட்டுத் தூள்களை நீரில் போட்டு,

5. பாட்டிலை மூடி, ஈக்கள் பெருகும் இடங்களில் வைத்து விடவும்.

6. 12 மணி நேரத்தில் எத்தனை ஈக்கள் பிடிபடுகின்றன என கூர்ந்து கவனிக்கவும்.

பி.கு: நான் இதுவரை, நாளொன்றுக்கு 500 ஈக்களுக்கு குறைவில்லாமல் பிடித்து, குப்பையில் குழி தோண்டி மூடியுள்ளேன்.

(யோசனைக்கு நன்றி: திரு. *சேந்தமங்கலம் அப்துல் மாலிக், டெல்டா இயற்கை விவசாயிகள் குழுவிலிருந்து DOFA *)


No comments:

Post a Comment