முருங்கை மரத்தில் உள்ள விதையை கொண்டு பல கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்கலாம்.
karuppu.thamizhstudio.com
.உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. நீண்டகால தண்ணீர் பயன்பாட்டிற்காகவும் உலக வெப்ப மயமாதலை குறைக்கவும் பல ஆய்வாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். உலக மக்கள் தொகையில் 2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இருப்பதாக ஐநா சபை கூறுகிறது. இந்நிலையில் இந்திய மரமான முருங்கை மரத்தில் உள்ள விதையை கொண்டு பல கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்டீபன் வெல்கால் என்னும் ஆய்வறிஞர், முருங்கை மரத்தில் உள்ள மூலப்பொருளின் புரதங்களோடு மணலை கலந்து மலிவான அதே சமயத்தில் வெற்றிகரமான தண்ணீர் வடிகட்டியை கண்டுபிடித்துள்ளார். இதற்கு F-SAND என பெயரிட்டுள்ளார்.
இந்த முருங்கை மரம் உணவிற்காகவும் இயற்கை எண்ணெய்க்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் ஏற்கனவே எளிமையான தண்ணீர் வடிகட்டியாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆனால் இந்த பாரம்பரிய சுத்திகரிப்பில் விதைகளில் உள்ள கரிம கார்பன் மிகுதியாக சேர்ந்து விடுவதால், 24 மணி நேரத்திற்குள் இத்தண்ணீரில் பாக்டீரியா வளர ஆரம்பித்து விடுகிறது. ஆகையால் ஸ்டீபன் முருங்கை விதையில் உள்ள புரதங்களை தனியே எடுத்து மணலின் முக்கிய கூறான சிலிக்கா துகளோடு இணைத்து F-SANDயை வடிவமைத்துள்ளார்.
F-SAND நுண்ணுயிர்களை அழிப்பதோடு தண்ணீரின் கலங்கல் திறனையும் குறைத்து விடுகிறது. மேலும் அசுத்த பொருள்களான கரிம கார்பனை வெளியேற்றி விட்டு நீண்ட காலத்திற்கு தண்ணீர் கெட்டுப் போகாமல் பார்த்து கொள்கிறது. இந்த F-SAND மறு உபயோகத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது இதிலுள்ள சிறப்பான அம்சம்.
முருங்கை விதைகளிலிருந்து கொழுப்பு அமிலங்களையும் எண்ணெயும் பிரித்து எடுத்து விற்பதற்கே தற்போதுவரை முருங்கை மரங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. விதையில் உள்ள கொழுப்பு அமிலங்களை பிரித்து எடுப்பதினால் F-SAND தயாரிப்பதிலோ அல்லது அதன் செயல்பாடுகளிலோ சிறிய அளவான விளைவையே ஏற்படுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் வளரும் நாடுகளுக்கு மிகவும் நன்மை உண்டாகும்.
F-SANDற்கு தேவையான அடர்த்தியை ஏற்படுத்துவதற்கு அதிகப்படியான விதைகள் தேவைப்படும். இதன் காரணமாக F-SAND செயல்திறன் மீதும் அதன் விலை விஷயத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் விதையின் புரதங்கள் சிலிக்கா துகள்களோடு நன்றாக பற்றிக்கொள்வதால், கடினமான அல்லது மென்மையான தண்ணீராக இருந்தாலும் அதிலுள்ள அசுத்தங்களை நீக்கிவிடுகிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆகையால் எந்தப் பகுதிகளிலும், தண்ணீர் எந்த நிலையில் இருந்தாலும் இந்த F-SAND உபயோகமாக இருக்கும். இதுவரை வளரும் நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்த மலிவான மற்றும் எளிமையாக கிடைக்ககூடிய தண்ணீர் வடிகட்டி இந்த F-SAND மூலம் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வு LANGMUIR இதழில் வெளியாகியுள்ளது.
karuppu.thamizhstudio.com
.உலகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. நீண்டகால தண்ணீர் பயன்பாட்டிற்காகவும் உலக வெப்ப மயமாதலை குறைக்கவும் பல ஆய்வாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். உலக மக்கள் தொகையில் 2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இருப்பதாக ஐநா சபை கூறுகிறது. இந்நிலையில் இந்திய மரமான முருங்கை மரத்தில் உள்ள விதையை கொண்டு பல கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்டீபன் வெல்கால் என்னும் ஆய்வறிஞர், முருங்கை மரத்தில் உள்ள மூலப்பொருளின் புரதங்களோடு மணலை கலந்து மலிவான அதே சமயத்தில் வெற்றிகரமான தண்ணீர் வடிகட்டியை கண்டுபிடித்துள்ளார். இதற்கு F-SAND என பெயரிட்டுள்ளார்.
இந்த முருங்கை மரம் உணவிற்காகவும் இயற்கை எண்ணெய்க்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் ஏற்கனவே எளிமையான தண்ணீர் வடிகட்டியாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆனால் இந்த பாரம்பரிய சுத்திகரிப்பில் விதைகளில் உள்ள கரிம கார்பன் மிகுதியாக சேர்ந்து விடுவதால், 24 மணி நேரத்திற்குள் இத்தண்ணீரில் பாக்டீரியா வளர ஆரம்பித்து விடுகிறது. ஆகையால் ஸ்டீபன் முருங்கை விதையில் உள்ள புரதங்களை தனியே எடுத்து மணலின் முக்கிய கூறான சிலிக்கா துகளோடு இணைத்து F-SANDயை வடிவமைத்துள்ளார்.
F-SAND நுண்ணுயிர்களை அழிப்பதோடு தண்ணீரின் கலங்கல் திறனையும் குறைத்து விடுகிறது. மேலும் அசுத்த பொருள்களான கரிம கார்பனை வெளியேற்றி விட்டு நீண்ட காலத்திற்கு தண்ணீர் கெட்டுப் போகாமல் பார்த்து கொள்கிறது. இந்த F-SAND மறு உபயோகத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது இதிலுள்ள சிறப்பான அம்சம்.
முருங்கை விதைகளிலிருந்து கொழுப்பு அமிலங்களையும் எண்ணெயும் பிரித்து எடுத்து விற்பதற்கே தற்போதுவரை முருங்கை மரங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. விதையில் உள்ள கொழுப்பு அமிலங்களை பிரித்து எடுப்பதினால் F-SAND தயாரிப்பதிலோ அல்லது அதன் செயல்பாடுகளிலோ சிறிய அளவான விளைவையே ஏற்படுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் வளரும் நாடுகளுக்கு மிகவும் நன்மை உண்டாகும்.
F-SANDற்கு தேவையான அடர்த்தியை ஏற்படுத்துவதற்கு அதிகப்படியான விதைகள் தேவைப்படும். இதன் காரணமாக F-SAND செயல்திறன் மீதும் அதன் விலை விஷயத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் விதையின் புரதங்கள் சிலிக்கா துகள்களோடு நன்றாக பற்றிக்கொள்வதால், கடினமான அல்லது மென்மையான தண்ணீராக இருந்தாலும் அதிலுள்ள அசுத்தங்களை நீக்கிவிடுகிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆகையால் எந்தப் பகுதிகளிலும், தண்ணீர் எந்த நிலையில் இருந்தாலும் இந்த F-SAND உபயோகமாக இருக்கும். இதுவரை வளரும் நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்த மலிவான மற்றும் எளிமையாக கிடைக்ககூடிய தண்ணீர் வடிகட்டி இந்த F-SAND மூலம் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வு LANGMUIR இதழில் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment