Tuesday, July 10, 2018

இனிமையான குரல் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்

*** இனிமையான குரல் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம் ***

குரல் இனிமையாக இருக்கவேண்டுமென எல்லாருக்குமே ஆசை. ஆனால் கரகரப்புடன் ஸ்ருதி விலகி, குரலே சுமார் ரகத்தில் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதனை மெருகூட்ட முடியும். .

மிகவும் சுமாரான குரல் உடையவர்கள் வசீகரமான குரலை பெறுவதற்கு சில வைத்திய முறைகள்தான் காரணம். அதோடு சில முக்கிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
How to improve your vocal health
உரக்க பேசுவது தொண்டையின் குரல் அளவை பாதிக்கும். கட்டை மாறிவிடும். ஆகவே நன்றாக பாட வேண்டும் என்று நினைப்பவர்கள் கத்தி பேசுதலை தவிர்க்க வேண்டும். (பாடுபவர்களின் பேச்சை கேட்டுப்பாருங்கள். ஸ்ப்தமே அதிகம் வராது. )
உங்களுக்கு நல்ல குரல் வளம். ஆனால் தொண்டையில் பிசறல் அதிகம் இருந்தாலும் ராகம், ஸ்வரம் கை கூடாது. இப்படி நல்ல குரல் வளம் பெறவும். பிசிறில்லாத குரல் பெறவும் கீழே உள்ள குறிப்புகளை உபயோகப்படுத்திப் பாருங்கள் கை கொடுக்கும்.

பேரிச்சம் பழம் :
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் குரலில் இருக்கும் கரகரப்பு போய் இனிமையான குரல் கிடைக்கும்.

சின்ன வெங்காயம் :
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒரு ஸ்பூன் வெண்ணெயில் வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் இனிமையான குரலாக மாறும்


மாவிலை :
முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும்.

சுக்கு மிளகு திப்பிலி :
அதிமதுரம், பனங்கற்கண்டு, திப்பிலி சம அளவு இடித்து வைத்துக் கொண்டு காலை, மாலை நெல்லிக்காயளவு சாப்பிட்டு வந்தால் இனிமையான குரல் கிடைக்கும். அதுபோல் வல்லாரைக் கீரையை தினசரி சாப்பிட்டு வர இனிமையான குரல் கிடைக்கும்.

தேன் :
தினமும் காலையில் வெறும் வயிற்றில் மலைத்தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் , தொண்டையில் இருக்கும் கரகரப்பு நீங்கி , தடங்கலில்லா இனிமையான குரலை மாறுவது நிஜம்.

மருதாணி மருத்துவ பயன்

மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும்.
இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் கிடைகின்றன.
மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும். பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்.

கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக வைப்பதின் மூலம் அவர்றை சரிசெய்யலாம். தொண்டை கரகரப்புக்கு கொப்பளிப்பு நீராகும். இலைகளின் வடிசாறு, அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும்.

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை.

மருதாணி இட்டுக் கொண்டவதால் சிலருக்கு சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம்.

இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

– அனைவருக்கும் பகிருங்கள்

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,

சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக

அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு  வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

** மாரடைப்பு **

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

SMILE (சிரிக்க சொல்வது),
TALK (பேச சொல்வது),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!!

முகம் பளபளக்க

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.

தயாரிக்கும் முறைகள்

இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்

கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்

கோரை கிழங்கு பொடி 100 கிராம்

உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

பாதாம் நன்மைகள்

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா?

✅ பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது தான் நல்லது.

✅ பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

✅ இதுவரை பல கட்டுரைகளில் நட்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று படித்திருப்பீர்கள்.

✅ ஆனால் அந்த நட்ஸை எப்படி சாப்பிட்டால், அதன் முழு நன்மைகளையும் பெற முடியும் என்று நீங்கள் படித்த கட்டுரைகளில் சொல்லி இருக்கமாட்டார்கள்.

✅ இந்த கட்டுரையில், பாதாமை சரியான வழியில் சாப்பிடும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

✅ மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடுகையில், பாதாம் அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. இந்த பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.சரி, இப்போது பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

✅ செரிமானம் பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும்.

✅ கெட்ட கொலஸ்ட்ரால் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

✅ உயர் இரத்த அழுத்தம் நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

✅ எடை குறையும் பாதாமில் மோனோ அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

✅ முதுமையைத் தடுக்கும் நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.

✅ இரத்த சர்க்கரை அளவு பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

✅ புற்றுநோய் குறிப்பு ..

✅ ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

 ✅ பிறப்பு குறைபாடுகள் கர்ப்பிணிகள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் ஃபோலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். ஃபோலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.

👉அனைவருக்கும் பகிருங்கள்!

நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு.

என்றுமே கெட்டு போகாத கெமிக்கல் ஹார்லிக்ஸ்,காம்ப்ளான் உங்கள் சத்து மாவே அல்ல

இதுதான் உண்மையான ***நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு***

​தமிழன் சத்துமாவு Tamizhan Health Mix

உடல் வலிமையும் உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

**சேர்த்துள்ள பொருட்கள்:

​முளை கட்டிய பொருட்கள்​
1.ராகி
2.வெள்ளை சோளம்
3.சிவப்பு சோளம்
4.மக்கா சோளம்
5.பாசிப்பயறு
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.சிவப்பு சோயா
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை
16.கருப்பு கொண்டை கடலை
17.நரிப்பயறு

தமிழன் சத்துமாவு
9488909136

​முளை கட்டாத பொருட்கள்​
18.வெள்ளை எள்
19.கசகசா
20.பொட்டுக்கடலை
21.அவல்
22.ஜவ்வரிசி
23.பனங் கிழங்கு
​நட்ஸ் வகைகள்​
24.பிஸ்தா
25.முந்திரி
26.சாரப்பருப்பு
27.பாதாம்
​வாசனை பொருட்கள்​
28.ஓமம்
29.சுக்கு
30.ஏலம்
​பாரம்பரிய அரிசி வகைகள்​
31.மாப்பிள்ளை சம்பா
32.கருப்பு கவுணி அரிசி
33.சிகப்பு அரிசி
34.மூங்கில் அரிசி
35.தினை
36.வரகு
37.குதிரை வாலி
38.சாமை
39.பார்லி
​மூலிகை பொருட்கள்​
40.ஜாதிக்காய்
41.மாசிக்காய்
42.அமுக்கிரா கிழங்கு
43.அதிமதுரம்
44.நாயுருவி
45.நாட்டு அத்தி

45 ​வகையான பொருட்களை சேர்த்து அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்​
Whatdapp Or Call

9488909136
9488909135
04341256136

​சத்துபானம் தயாரிக்கும் முறை​

தேவையான பொருட்கள்

சத்துமாவு – 2 ஸ்பூன்

பால் அல்லது தண்ணீர் – 2 டம்ளர்

நாட்டு சக்கரை அல்லது பனஞ் சக்கரை அல்லது உப்பு மிளகு– தேவைக்கு

​செய்முறை​

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.

கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.

சிறிது நேரத்தில் காய வைத்த பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் இனிப்பு சேர்த்து கலக்கி இறக்கவும்.

அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு பானம் தயார்

அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.

​குறிப்பு​

முளை கட்டி அரைத்த சத்துமாவு

6 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2. 6மாத குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம்

3.காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

இயற்கையான முறையில் முளைகட்டி அரைத்த தரமான தமிழன் பாரம்பரிய சத்துமாவு கிடைக்கும்

45 வகையான பொருட்கள் சத்துமாவில் சேர்க்கப்பட்டுள்ளது

ஆறு மாத குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்

1 கிலோ ₹ 350
2 கிலோ ₹ 640
5 கிலோ ₹ 1500
10 கிலோ ₹ 2800

இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் இலவசமாக  Delivery செய்யப்படும்

தேவைப்படும் நபர்கள் வங்கியில் பணம் செலுத்தி விட்டு WhatsApp எண்ணிற்கு முகவரி அனுப்பவும்

Whatsapp எண் 9488909136

NAME.      M.Naresh Kumar
Acc No.     0458301000038803
BRANCH   Mathur
IFSC.         LAVB0000458
BANK.      Lakshmi Vilas Bank

             அல்லது

NAME.  M.Naresh Kumar
Acc No.       35465712578
BRANCH      pochampalli
IFSC.            SBIN0007494
BANK.          State Bank of India

தொடர்புக்கு

தமிழன் பாரம்பரிய சத்துமாவு
மத்தூர் கிராமம்
மத்தூர் அஞ்சல்
போச்சம்பள்ளி வட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 635203

Whatsapp 9488909136
Mobile       9488909135

நண்பர்களுக்கு பகிரவும்


Join Telegram Group

https://t.me/joinchat/FIZzZlLrgkE1x-E78Uq-Xw

மேலும் தமிழன் பாரம்பரிய சத்துமாவை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Facebook Link ஐ Click செய்யவும்

https://www.facebook.com/traditionaltamizhanhealthmix/

நண்பர்களுக்கு பகிரவும்

🎋🌾🍂🍃☘🍁☘🍃🍂🌾

தொப்பை குறைக்க கொள்ளு சூப்

**** தொப்பை குறைக்க கொள்ளு சூப் ****

கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி அருந்தவும்.

==================================================================
Nisha   Therapy   center    Madurai  &chennai

உடல் எடையைக் குறைக்க உணவுப்பட்டியல்


காலை உணவு:

     1. இரண்டு டம்ளர் ராகி கஞ்சி (அல்லது)
     2. 4 அல்லது 6 இட்லி, கொத்தமல்லி சட்னியுடன் (அல்லது)
     3. கோஸ், பீன்ஸ், செள செள போன்றவைகளைச் சேர்த்து சூப்பாகச் செய்து அருந்துதல். (அல்லது)
     4. ஏதேனும் ஒரு கீரை சூப் மட்டும்.

மதிய உணவு:

     1. ஒரு கப் சாதம் மற்றும் சமைத்த காய்கறி, கீரைகள், 1 சப்பாத்தி, (அல்லது) 2 காய்கறி சாலட், பழக்கலவை

இரவு உணவு :

     இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.
     1. மூன்று இட்லி அல்லது இடியாப்பம் (அல்லது)
     2. பப்பாளி, மாதுளைப்பழம், சாத்துக்குடி, கொய்யா, ஆரஞ்சு, அத்திப்பழம், வெள்ளரிக்காய் இவைகளின் தேவையான அளவு.
     3. இரவு உணவை முடித்தபின், தண்ணீர் தவிர வேறெதுவும் விடியும் வரை சாப்பிடக் கூடாது.

     மேலே சொல்லப்பட்ட உணவு வகைகளோடு மெது ஓட்டம் (Jogging), நடைப்பயிற்சி (Walking) சைக்கிள் விடுதல் (Cycling), நீச்சல் பழகுதல் (Swimming) யோகாசனம் (Yoga), மூச்சுப்பயிற்சிகள் (Breathing Excercise)  ஆகியவற்றினாலும், அதிக உடல் எடையைக் குறைக்க முடியும்.

குளிக்கும் திசை

*** குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும்-- மதி முனிசாமி ***

(இவை இரண்டும் உத்தம திசைகள்.  (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).



<எஸ்.கே>தமிழ்
மதுரை👈🇮🇳🚀🌍
வாட்ஸ் ஆப் எண்
9842171532🌺🌻🌹🌼




தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  #குளிக்கும்முன்ஒருகுவளைதண்ணீரில் #மோதிரவிரலால்_ஓம்என்றுத்யானம் #செய்துஎழுதுங்கள்.  #அந்தநீர் #அப்போதுமுதல்கங்கைநீராகமாறிவிடும்.  ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.

#அக்னிஎப்போதும்மேல்நோக்கியே #பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். 

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை.

 தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும். 

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

#பிறருடன்வாய்திறந்து_பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

      🌻🌻    குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது. 🌻🌻 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.

#ஓம்சிவாயநமஓம்!

நன்றி🙏



என்றும் அன்புடன்,

எம்.சரவணக்குமார்@எஸ்.கே
<எஸ்.கே>தமிழ் இணையம்™
மதுரை

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற

**** நண்பர்களே மழைகாலங்களில் மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இந்த முயற்சியை செய்யுங்கள் ****

1. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்

2. தரையிலிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள்(ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு மட்டும்)

3. துளைகளுக்கு 1 இன்ச் கீழ் வரை நீரை நிரப்பிக் கொள்ளவும்.

4. 10-15 கிராம் அளவில் கருவாட்டுத் தூள்களை நீரில் போட்டு,

5. பாட்டிலை மூடி, ஈக்கள் பெருகும் இடங்களில் வைத்து விடவும்.

6. 12 மணி நேரத்தில் எத்தனை ஈக்கள் பிடிபடுகின்றன என கூர்ந்து கவனிக்கவும்.

பி.கு: நான் இதுவரை, நாளொன்றுக்கு 500 ஈக்களுக்கு குறைவில்லாமல் பிடித்து, குப்பையில் குழி தோண்டி மூடியுள்ளேன்.

(யோசனைக்கு நன்றி: திரு. *சேந்தமங்கலம் அப்துல் மாலிக், டெல்டா இயற்கை விவசாயிகள் குழுவிலிருந்து DOFA *)


பல நோய்களுக்கான ஒரு மருந்து

**** பல நோய்களுக்கான ஒரு மருந்து ****

தேவையான பொருட்கள்:-

* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm

****செய்முறை:

1.மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

2.இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

3.இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

4.தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

**** பயன்கள்

1. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
4. இருதயம் சீராக இயங்குகிறது.
5. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
6. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
7. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
8. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
9. கண் பார்வை தெளிவடைகிறது.
10. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
11.மலச்சிக்கல் நீங்குகிறது.
12. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
13. பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
14. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
15. ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
16. நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
17.இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

முடி கொட்டுதலை நிறுத்த எளிய மருத்துவம்

** முடி கொட்டுதலை நிறுத்த எளிய மருத்துவம்


கரிசலாங்கன்னி
அதிமதுரம்
திரிபலா
கறிவேப்பிளை
இவைகள சம அளவு சூரணம் செய்து காலை இரவு ஒரு ஸ்பூன் பாலில் சாப்பிடவும்


*** கூந்தல் வளர்ச்சி தைலம்

கறிவேப்பிளை 100 கிராம்
செம்பருத்தி பூ 100 கிராம்
நெல்லிக்காய் 100 கிராம்
கறி சலாங்கன்னி 100 கிராம்
அருகன்புல் 100 கிராம்
மருதாணி இலை 100 கிராம்
வெள்ளை வெங்காயம் சார் 100 மில்லி

பொன்னாங்கன்னி கீரை 100 கிராம்
அரைக்கீரை வேர் 100 கிராம்
அதிமதுரம் 100 கிராம்
இவைகளை 2 கிலோ தேங்காய் என்னையில் போட்டு நீர் சுன்ட காய்ச்சி வடித்து தலைக்கு தடவி வர தீரும்

மரு.ரமேஷ் சிவன்

கும்மிடிப்பூண்டி

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்

அரிசி

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?

இதோ👇

1. கருப்பு கவுணி அரிசி

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி :

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி :

எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி :

பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :

தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி :

குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி :

இரத்த சோகை நீங்கும்.

17. சீரகச் சம்பா அரிசி :

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி :

உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி :

தாய்ப்பால் ஊறும்.

20. சேலம் சன்னா அரிசி :

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி :

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி :

அமைதியான தூக்கம் வரும்.

பகிருங்கள்
அனைவரும் பலன் பெறட்டும்

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்...

Dr.NK.Gobinath B.S.M.S
   

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்...

Kidney Failure : கத்திரிக்காய்
Paralysis : கொத்தவரங்காய்
Insomnia : புடலங்காய்
Hernia : அரசாணிக்காய்
Cholesterol : கோவைக்காய்
Asthma : முருங்கைக்காய்
Diabetes : பீர்கங்காய்
Arthritis : தேங்காய்
Thyroid : எலுமிச்சை
High BP : வெண்டைக்காய்
Heart Failure : வாழைக்காய்
Cancer : வெண்பூசணிக்காய்

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚
💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚
💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚
💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚
💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚
💎வாழை வாழ வைக்கும்💚
💎அவசர சோறு ஆபத்து💚
💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚
💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚
💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚
💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚
💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚
💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚
💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚
💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚
💎சித்தம் தெளிய வில்வம்💚
💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி💚
💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு💚
💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்💚
💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு💚
💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை💚
💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி💚
💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு💚
💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி💚
💎வாத நோய் தடுக்க அரைக் கீரை💚
💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்💚
💎பருமன் குறைய முட்டைக்கோஸ்💚
💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்💚

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

சொரியஸ் , நரம்பு_சுருட்டல் ?

இதற்கு மற்றும் ஒரு மருத்துவம் உண்டு.

கழற்சிக்காய் -1,
மிளகு-5

போதுமானது.

*** மருந்து உட்கொள்ளும் முறை ***

ஒரு கழற்சிக்காயை உடைத்து உள்ளிருக்கும் பருப்பு மட்டும் எடுத்துக்கொள்ளவும். அதோடு 5மிளகு சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவேண்டும். மிகவும் கசப்பாக இருக்கும் பொறுத்துக்கொள்ளவும்.இம்மருந்தை காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். காலை என்பது தூங்கி எழுந்து பல் துலக்கியவுடன் சாப்பிடவேண்டும்.மருந்து உட்கொண்ட பின் அரை மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது.மாலை என்பது 4 to 6 மணிவரை இந்த நேரத்தில் வயிறு காலியாக இருக்கும். இதற்கு பத்தியம் இல்லை. ஆனால் மது, புகை அறவே கூடாது. இம்மருந்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) சாப்பிடவேண்டும்.வெரிகோஸ் வெயின் இருப்பவர்கள் கழற்சிக்காயையும், மிளகையும் எப்போதும் பையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. உடனடி நிவாரணம் கிடைக்கக்கூடியது. எனது அனுபவத்தில் சொல்கிறேன்.


*** நரம்பு_சுருட்டல் ?

#varicosisveins
#_வெரிக்கோசிஸ்வெயின்

#இதனை_கவனிக்காமல் #விட்டால்……!!!! ?????

நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு 
(#varicosis #veins)என்கிறோம். இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். 

பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும் சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும்.

பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும், தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும். 10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும், சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது. குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது. தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள்.

நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால் ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில் அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும். இதனையே #வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். 

#காரணங்கள்: 

அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை. #ரத்தநாளங்களில் உள்ள #வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி தளதளஎன ஆகிவிடுகிறது.
வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம். 

#அறிகுறி:

இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும். சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் #மரத்து போகும் நிலை ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் #குழாய் #வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும். சில சமயம் (#eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்னை ஏற்படும். 

கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் #வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். 

#நோயினால்_வரும் #பிரச்னைகள்: 

தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம் ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும். டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின் உள் ஒட்டி கொண்டு இருக்கும்.

இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் #இருதயம் மற்றும் #மூளையில் #அடைப்பை ஏற்படுத்த #வாய்ப்புண்டு.

#நோய்க்கான_மருந்து !

#இரத்தநாளவீக்க_நோய் #கசாயம் !!

வல்லாரைக் கீரை ......... ஒரு கைப்பிடி 

நெருஞ்சில் ........... ஐந்து கிராம் 

கருஞ்சீரகம் ........... ஐந்து கிராம்

சீரகம் ........... ஐந்து கிராம்

சுக்கு ........... ஐந்து கிராம்

மிளகு ........... ஐந்து கிராம்

திப்பிலி ........... ஐந்து கிராம்

ஆகிய ஆறு பொருட்களை சம அளவு எடுத்து லேசாக வெதுப்பி ஒன்றிரண்டாக இடித்து மண் சட்டியில் போட்டு 
அத்துடன் ஒரு கைப்பிடி வல்லாரைக் கீரை போட்டு 
ஐநூறு மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கசாயமாக்கி நூறு மில்லியாக சுருக்கி குடித்து வர வெரிகோஸ் வெயின் என்ற இரத்த நாள வீக்க நோய் படிப்படியாகக் குணமாகும்.

தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும் ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து சாப்பிட வேண்டும்.

♦மருதம் பட்டை சூரணம் காலை & மாலை 1/2 கி தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிடவும்.

முகம் பொலிவுக்கு

*** முகத்தில் வரும் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் நீங்குவதற்கு

சிலருக்கு முகத்தில் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் வரும். இதற்கு கண்டகண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.


**முகப்பரு நீங்க :

* புதினா இலையை அரைத்து, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் முகப்பரு நீங்கும்.

* தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை சமமான அளவில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு குறையும்.


**முகத்தில் கட்டிகள் குறைய :

* சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்



***முகத்தில் கரும்புள்ளிகள் குறைய :

* கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.

* சிறிதளவு கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயத்தம் பருப்பு மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.


ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள்,பருக்களை இயற்கையான முறையில் போக்க சூப்பர் டிப்ஸ்!
அக்காலத்தில் நம் பாட்டிமார்கள் அழகு நிலையங்களுக்குச் சென்றா, தங்களது அழகைப் பராமரித்தார்கள். நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தங்கள் அழகைப் பராமரித்தார்கள். இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியதால், அவர்களது சருமம் பல வருடங்களுக்கு இளமையுடனும், எவ்வித பிரச்சனை இல்லாமலும் இருந்தது.

இக்கட்டுரையில் நம் முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பல வருடங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.

பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

பூண்டு

பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

ஜிங்க் மற்றும் செலினியம்

ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்

Yoga


பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்களே!

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 அந்த கூட்டு பெருங்காயம் ...
 இந்த கூட்டு பெருங்காயம் ...
 அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...
பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் முருங்கை....!!

**** எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் முருங்கை ***

முருங்கை மருத்துவம்  அற்புத வைத்தியம்...முருங்கை கஞ்சி....!!

    இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி  எடுத்து ,

மிக்ஸியில்  அரைத்து சாறாக்கி,

அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்,

 அதில் ,
     ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து,

அதில்,
     ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து,

கூடவே ,
    இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து,

சிறிது,
    சுக்கு ,மற்றும்
     ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

  அரிசியில் முருங்கை சாறு நன்றாக  ஊறிவிடும்..

அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை  காயவைத்து,

 சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

 அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி,

தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,

கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,

    உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,

 L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

" disc prolapse " ஆவது ...

இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து
முருங்கைக்கீரைதான் ....!!

அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து

 கொண்டுள்ள இந்த
 முருங்கைக்கீரைக் கஞ்சியை

   48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!
இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,

 உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

  இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!

அனைவருக்கும் பகிருங்கள்...!!
பயன் பெறுங்கள்....!!

நண்டின் மருத்துவப் பயன்கள்

 மருத்துவ குறிப்பு


🦀நண்டின் மருத்துவப் பயன்கள்💉

🦀நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது.

🦀அதிக அளவிலான மினரல்ஸ், விட்டமின் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது. மேலும் மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

🦀உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இதில் உள்ள செலீனியம் சத்து உதவுகிறது. ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும்.

🦀இதில் உள்ள ரிபோபிளேவின் சத்து, இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் கண்கள், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டினையும் ஊக்குவிக்கிறது.

🦀பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள்.
ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க், எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

═══◄•• 👨🏻‍💻வசந்தம்👨🏻‍💻••►═══

நாட்டு மாடுகள் இலவசம்

** நாட்டு மாடுகள் இலவசம் -- கலப்பை குழு ***

இயற்கை விவசாயம் செய்யும் விவசாய அன்பர்கள்களுக்கும் நாட்டு மாடுகள் வளர்க விரும்பும் அன்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள். எங்களிடம் நூற்றுக்கும் மேலான நாட்டு பசு மற்றும் காளை  கன்றுகள் உள்ளது. பராமரிப்பு மற்றும் தீவன பற்றாக்குறையினால் பராமரிப்பு கடினமாக உள்ளது. எனவே  வளர்க விரும்பும் விவசாயிகளுக்கு  இலவசமாக கொடுக்க விருப்புகிறேன்.

தகவலுக்கு T.மணி
கும்மிடிப்பூண்டி வட்டம்
திருவள்ளுவர் மாவட்டம்
செல் 9445722500......
9445545191.......
9842784219........

தவறான நோக்கத்துக்கும்,மாமிசத்துக்கும் - கட்டாயம்  கிடையாது

ஆரோக்கிய உணவு

*** ஆரோக்கிய உணவு - மதி முனிசாமி ***

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

தயவு செய்து

வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும்,

ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!

ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???

தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!

கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???

🚪தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!

🍅🥕🥒🍆🌰🥔 ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!

🥃 சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!

நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ! அன்றே நாம் நோய்யின் பிடியில் சிக்கிக் கொண்டோம். இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.
இன்றே!மீட்டெடுப்போம்!

 *வாருங்கள்!

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள்.
கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக
இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு
சாப்பிடக்கூடாது.

மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்
வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை
சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்
எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி
சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

சிலர் சாம்பார், ரசம்,
வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்
எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள
பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி,
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும். இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்.
"வாழ்க நலமுடன்"...

Happiness



*** Happiness - Premkumar, Chennai **

Happiness can be divided into 3 categories :-

1. Physical happiness;
2. Mental happiness;
3. Spiritual happiness.

These are brief summary of steps to take for achieving these in our lives:

For Physical Happiness:
a. Regular and proper DIET.
b. Regular and proper REST.
c. Regular and proper EXERCISE.

For Mental Happiness:
a. Minimize Expectations.
b. Minimize Ego & Pride.
c. Minimize Negative Thoughts.

For Spiritual Happiness:
a. Recognize your SOUL as a separate entity from the body.
b. Do not live in the PAST.
    Free yourself of past memories
    and experiences.
    Do not worry about the FUTURE.
    But, plan for IT.
c. Help all living beings without
    any expectations.
d. Meditate regularly and surrender
     to the Supreme Soul.
 
           BE HAPPY ALWAYS



Dr A Muhilan*

BODY TALKS

BODY TALKS.............. 13 Types Of Pain That Are Directly Linked To The Emotional States

DIS-EASE  (I AM NOT AT EASE) is just an emotional state of mind.
Chronic pain is not only caused by physical injury, but also caused by stress and emotional issues.

Let’s take a look at what pain in a particular area of your body indicates and how to self heal ourselves:

1.Head
Headaches (little or chronic) can be caused by invalidating the self.Self-criticism. Fear.
Self-Heal : Do left nostril breathing (Chandra nadi).
Inhale-Exhale through left nostril 2 sets of 10 counts twice a day.

2.Neck
Neck pain represents inflexibility & stubbornness.
Self-Heal : Rotate the neck clock - anticlockwise 50 times.

3. Shoulders
Pain in the shoulders indicate that the person carries a heavy emotional burden. Shoulders carry everything.
Self-Heal : Rotate the shoulders clock-anticlockwise for 50 times.

4.Upper Back
Upper back pain manifests lack of emotional support.  Holding back feelings or doesn’t feel appreciated or loved.
Self-Heal : Place the hand in Namaste position in the centre of the chest, thumbs touching the chest. Apply pressure with the thumbs to the chest and exhale through the mouth.Do it 20 times.

5.Lower Back
Pain in the lower back indicates fear of money, lack of financial support.
Self-Heal : Do visualisation meditation (imagine yourself)  counting a bundle of notes. Do it daily.(Fake it till you make it).

6.Elbows
 Elbows and arms signify a lack of capacity & ability to hold the experiences of life. Resisting change of directions and acceptance.
Self-Heal : Just wrap your hands around yourself as if hugging your own self and say this to yourself..
"I trust, love, accept, approve and forgive myself." As many times as possible everyday.

7.Hands
Pain in the hands may be caused by all ways of dealing with hold & handle, clutch & grip, grasping & letting go.
Self-Heal : Hold a pen/pencil tightly in your hand (image that the object (pen/pencil) is the xyz situation of ones life) then when ready to "Release" the situation just throw the pen/pencil with full force & free yourself.

8. Abdomen
Undigested thoughts.
Self-Heal : Place your hands on the belly button(navel) & do 4-4-4-4 count breathing.
4 count Inhale
4 count Hold
4 count Exhale
4 count Hold.
Do it as long as comfortable.

9.Hips
Major thrust in moving forward.
Self-Heal : Sit on the floor placing the legs straight try walking lifting the hips.Walk 25 steps forward & 25 steps backwards.

10.Knees
Pain in the knee is a sign of pride & ego.
Self-Heal : Lie down on the floor, place the left ankle over the right knee & move the right knee up & down for 5 minutes. Then do the same with right ankle placing it above the left knee for 5 minutes.

11.Calves
Calf pain is caused by stress, emotional tension.
Self-Heal : Press the tender point 20 times located exactly in the centre of the calf(behind). Twice daily.

12.Ankles
Pain in ankles mean lack of ability to receive pleasure.
Self-Heal : Lie down on the floor, legs slightly apart & rotate the ankles clock-anticlockwise 50 times.

13.Feet
Feet pain represnts our lack of ability to  understandable one self, life or others.
Self-Heal : Take a tennis ball & place it under the feet & roll on it. Can do it while sitting or standing.

Do these exercises & observe self.. Lets help the body heal itself  automatically.

90% SICKNESSES are PHYSCOSOMATIC*...

வெட்டி வேரின் பயன்கள்

** வெட்டி வேரின் பயன்கள் **

வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர்!

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் & 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ...

ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.

இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது...

வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்னை களுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் & 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் & 100 கிராம், வெந்தயம் & 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!

Gopal Mansion - D Mart

Radhakishan Damani, the promoter of DMart, has created a facility at Gopal Mansion near Metro Cinema Queens Road Mumbai containing 53 rooms for stay of family of patients undergoing treatment in Mumbai. It was inaugurated yesterday. It's very nicely done.  May refer for any such genuine need for well wishers.

Address:
Gopal Mansion
50, Queen Road (Cinema Lane)
Near Metro Cinema
Mumbai 400 020

Contact Details:
Whattsup App. Mobile
91 88799 86893
e.mail:
fd@gopalmansion.com
gm@gopalmansion.com
Tel No: 022 22055001/02

www.gopalmansion.com

Rates are
Very Reasonable
Breakfast 30
Lunch Thaali 75
Dinner Thaali  75
Rooms at   800
Kitchen and Dining Very Spacious.

Please share widely.
Hi All..
If you have relatives in Mumbai then pl. share this information to all. We provide TIFFIN to  patients & relatives without any charges. Area - South Mumbai
Hospitals:- Jaslok, Saifee, Bombay, Nair, J.J, all near to Mumbai Central and VT....
Contact details:-
U can also WhatsApp us
Kalpesh Lodha 9967236006
Manoj Patwari 9820645070
Amrat Jain 9029373751
At least forward to people who might be able to help by forwarding to others.

R.K. Charitable Trust have started Home Medical Equipment like
* Wheelchair
* Suction Machine
* Waterbed
* Airbed
* Walker
Free of cost for use (with Refundable Deposit)
Contact person:-
Sanjay Shah 9322516628
Chintan Pandya :- 7666311942
Add:-17-D, Nisarga Apt. Near IDBI bank, Mahavir Nagar, Kandivali West Mumbai 67
Please post this message in the known groups so that it gets circulated.

SAI VILAYATRAI CHARITABLE POLYCLINIC
"Kambar Darbar" Shantilal Modi Road, Opp Bhurabbhai Hall, Kandivali(W), Mumbai.
T: 02265811644
0222865 9615
www.kambardarbar.org

DAY TIME CHGES

1. General OPD ₹1/- only with medicines
Daily 11-30 am & 4-30 pm

2. X-Ray  ₹100/-
Daily 9 am to 5-00 pm 

3. ECG ₹70.00
Daily 9.00 am to11.00 am

4. Pathology  Highly subsidised rates. CBC ₹20/- only.
Daily 8.30 am to 12.00 noon

5. Eye Checkup ₹20/-
Daily 3.30 pm
Morn 9am: Wed, Fri, Sat.
Cataract Surgery: FREE with best Indian lens.
Lazer (Phaco) surgery:
₹5,300/- US imported non-foldable lens
₹10,000/- UK imported foldable aspheric lens.(Outside rateRs 40,000/-)

6. Gynecology/ IVF/ Hysteroscopy 
Tue/Thur/Fri. 1 pm. 

7. Skin Spl.  ₹20.00
Mon 3.30 pm

8. Orthopedic ₹20.00
Tue 3.30 pm

9. Diabetic & Cardio  ₹20.00
Wed 4.30 pm

10. Child Spl.  ₹20.00
Fri  5.30 pm   

11. Ear / Nose / Throat  ₹20.00
Wed / Friday 3.30 pm

12. Dental Nominal Charges R C charges: ₹750/-.
Daily 9.00 am to 1.00 pm
Daily 2.00 pm to 5.00 pm

13. Dialysis Free for BPL patients 
Daily ( Phone: 28067645 )

14. Cervical cancer (Uterus Cancer) Test Free

15. Anti Cancer Injection for Girls  aged 14 yrs to 24 yrs.

16. Hearing Aids for Sr. Citizens @ 50% of the actual cost. Free for deserving children by Birth.

17. Notebooks and other staionery items to all students on discounted rates during summer vacation.

18. Scholarship for Higher Education for deserving candidates for BE MBBS CA CS BPHARM MCA & selected  MBA students.

Visit
www.kambarda bar.org & submit Form with all required enclosures.

Kindly contact on email p_zijn zasainani@rediffmail.com

NO NEED OF ANY  RECOMMENDATIONS.

KINDLY SHARE

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்

**** பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள் ****

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும்  விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில்  பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள்  நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை  எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச்  சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு  என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

* சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

* பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?
கார்த்திக் சூர்யா, குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

“பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.” https://youtu.be/1nP3VLGs2BE

சிறுநீரகக் கல்

** சிறுநீரகக் கல்... வெற்றிச்செல்வன் **

இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

VERY IMPORTANT PLEASE READ ITS ABOUT PLASTIC

VERY IMPORTANT PLEASE READ ITS ABOUT PLASTIC           

I fully agree with the following forwarded point of view. Vijay Naik :

Why yes to plastic & No to paper

It's a wrong notion that Plastic is hazardous and we should not use Plastic. Plastic has made our lives convenient with any food item, vegetables, water, medicine, garments, stationary, jewelery, toothpaste, shampoo, washing powder, food grains,  vegetable oil, milk, fruits & many more available anytime anywhere. It has given employment & livelihood to lakhs of people which always is a concern for any Government.

It has replaced paper and thus saved a lot of trees to be cut which is very much essential to stop global warming.

Plastic waste of course is a concern only when it is not collected and reused. All Plastic is recycled and reused. It is our responsibility to throw this Plastic or any wastage in Dustbin so it can be sent for recycling. We need to change our habits and not ban Plastic. We can also generate electricity from any plastic waste with hardly 1% residue. Where as thousand of trees & lakhs of litres of water is used to manufacture paper. This contaminated water is disposed in river or sea thus polluting the environment.

Plastic is made out of byproduct left after processing of crude oil which is extracted from the sea. So why No to Plastic?? Iron ore used for making metal is depleting our land. Paper is taking away our trees & pushing us towards global warming.

So when we say ban Plastic..are we talking to save environment??  Whom should we blame? A civilian who doesn't throw the thrash in Dustbin? Or the Municipal Corporation who has not developed an efficient system to collect & recycle plastic waste & pass their inability & failure to Plastic users?

Shouldn't these  Politicians stop playing with common man life and make political mileage ?

Mobile has made our lives easy but at the same time it is taking away our mental peace. It has made distance in relationship. It is also generating e-waste which is not recyclable. Should we ban use & sale of mobile?? Car, bikes, trucks emits lot of Co2.  So should we ban cars and stop manufacturing all vehicles? Air-conditioners emit lots of hot air, so should we ban Air-conditioners ? Lots of hazardous chemicals are used for agriculture which causes cancer.  Can't we ban them and go for organic farming immediately? I can give you many such examples which we should ban immediately.

Should we Ban Plastic??? Do we want to revert back to the18th century ??? Should we not correct our habits rather than banning all products & gadgets?? Can't we make rational use of all resources so we make our next generation life better?

Now can you think of replacing Plastic with Paper???

Think....
Circulate this post so it reaches the BMC, the CM & the Authorities concerned who blame Plastic in order to hide their inabilities & make the people suffer unnecessarily. 😙

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் செய்ய வேண்டியவை

**** ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் செய்ய வேண்டியவை.
வீட்டு மருத்துவம்....***



👉 தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.

👉 வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.

👉 வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.

👉 மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.

👉 கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

👉 ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

👉 இஞ்சியை சாறு எடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.

👉 தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.

👉 இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் நீங்கிவிடும்.

👉 காலையில் எழுந்ததும் யோகப் பயிற்சி செய்து பழக வேண்டும்.

👉 நன்கு பசியெடுத்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.

👉 தினமும் ஒரு பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

👉 கொதிக்க வைத்த தண்ணீர், நீருடன் கலந்த மோர், உருக்கிய நெய் இவற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

👉 முதல் நாள் சமைத்த உணவை அடுத்த நாள் சாப்பிடக்கூடாது.

👉 இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.

👉 சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடக்க வேண்டும்.

👉 சாப்பிட்ட உடன் பகல் பொழுதில் தூங்கக்கூடாது.

👉 நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரலைவெட்டவேண்டாம்

** விரலைவெட்டவேண்டாம் ***

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

 காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

 எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

 முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.

🙌இதற்கு கண்கண்ட மருந்து🙌

ஆவாரம்_இலை:👌
👍👍👍👍👍👍

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

 இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!

சருமத்தை பொலிவாக்கும் சில மருத்துவ குறிப்புகள்

**** சருமத்தை பொலிவாக்கும் சில மருத்துவ குறிப்புகள் ****

சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்றும் சில மரு/த்துவ குறிப்புகளை கீழே பார்க்கலாம்.

* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

* கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

* ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

* தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

தைராய்டு நோய் -பாட்டி வைத்தியம்

****** தைராய்டு நோய் -பாட்டி வைத்தியம் *****

1. பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.

2. தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.

3. சத்து பவுடர்:

தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.

*** தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள் ****

தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம். தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது.  உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு  நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும்.  சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது. அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும். சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

=========================================================
Thyroid Cure!!!
தைராய்டு நோய் குணமாக எளிய மருத்துவம் !

இரண்டு வகை தைராய்டு நோய்களும் குணமாகும் ( Hyper and Hypo )

காஞ்சனார குகுளு என்ற ஆயுர்வேத மாத்திரையை வாங்கி வந்து
நாள்தோறும்
காலை ஒரு மாத்திரை
இரவு ஒருமாத்திரை
என வெறும் வயிற்றில்
அதாவது  சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர்
அல்லது சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து
தொடர்ந்து சாப்பிட்டு வர
டெஸ்ட் எடுத்து உறுதி செய்து கொள்ளலாம்
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் கிடைக்கும் மருந்தை வாங்குவது மிக சிறந்தது
கிடைக்கவில்லையெனில் இம்ப்காப்ஸ் ( IMPCOPS )
அல்லது
எஸ் கே எம் ( S K M ) தயாரிப்புகளையும் வாங்கிப் பயன்படுத்தலாம்
இத்துடன்
நாள்தோறும் ஐந்து சீத்தா மரத்து இலைகளைக் கசாயம் இட்டுக் குடித்து வர ஹைப்போ
தைராய்டு நோய் சீக்கிரம் குணமாகும்

இது எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்.

இயற்கை மருத்துவம்

****** இயற்கை மருத்துவம் :- **********

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 

2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\". 

3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி). 

5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\" 

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\". 
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"

8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
 9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\" 

10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\" 

11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\" 

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"

 14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"

 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\" 

16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\" 

17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"

 18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\" 

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\" 

20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\" 
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"

 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

 23) கேரட்   மல்லிகீரை   தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\" 

25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\" 
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\" 

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி” 

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”. 

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில ��  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.

�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது

�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,

�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,

�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

�� இந்த தகவலை �� குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!

Niravu first organic village in Kerala

Niravu first organic village in Kerala..

101 families cultivate their own organic vegetabls, biogas etc..even they sell their produce and earnd 3 crores in the first year..till now over one lakh visited.

Niravu Organic Village launched in ward of Vengeri, Kozhikode district

Libin Chacko Kurian, Mumbai
Niravu Organic Village, an e-tail project aimed at encouraging the cultivation of hybrid varieties of organic vegetables, was launched by a residential association, comprising 101 households, in a ward of Vengeri village of Kerala’s Kozhikode district (which is the first organic village in the southern state, and does not use pesticides).

The National Bank for Agriculture and Rural Development (NABARD)-funded project, would enjoy technical support from the Kerala Agriculture University and the agriculture department. A study conducted in March 2014 by the Pesticide Residue Research and Analytical Laboratory under the College of Agriculture in Vellayani gave its vegetable samples zero-pesticide certificates.

The seven main vegetables sold by Niravu include tomato, cherry tomato, ladies’ finger, long beans, brinjal, broad beans and ivy gourd. The concept is aimed at bringing all farmers in the district on one platform, i.e. the Niravu website, where they can connect to their customers easily. The people behind the project are compiling a database of farmers to support their market through their website.

There was a huge demand for the organic vegetables produced under the Niravu banner, which prompted the state government to support the Vengeri initiative. It is providing free lab testing of vegetables cultivated in the village, and every vegetable produced by a farmer would have a tag bearing his name. This would ensure direct communication between the farmers and the consumers.

Babu Parambath, green activist and project coordinator, Niravu Organic Village, said, “Niravu is a revolutionary concept, born in 2006. We pledged to produce purely organic vegetables. The effect of chemical fertilisers and pesticides in vegetables was a revelation in our minds. It has devastating effects like deadly diseases and deteriorating human health.”

“Going back to organic vegetables for household use was a mere choice we made. We got to know about many hybrid varieties and planting methods for better growth of plants. Thus we had surplus produce. We started selling it outside the village, and spread the sales to other parts of the district also,” he added.

“The increasing demand and aid from government made our farms flourish. The Niravu Organic Village concept has been developed for better trade and selling products to its consumers,” Parambath said. K P Padmakumar, district development manager, NABARD, Kozhikode, said organic farming was the need of the hour in Kerala.

“It is heavily dependent on the neighbouring states of Tamil Nadu and Karnataka for the supply of vegetables. Niravu has been practicing organic farming methods for the last 7-8 years in Vengeri. Further, NIRAVU is doing yeoman service in the field of protecting environmental balance,” he added.

“It personalises environmental issues and enables everyone to realise not only their responsibilities, but also their power to become agents for change in support of sustainable and equitable development,” Padmakumar stated.