#புங்கை அல்லது #புங்கன் மருத்துவ குணங்கள்..
படிக்காமல் கடந்துவிட்டுப் பின்னாளில் வருந்த நேரிடலாம்.. கைவச மருந்துகளை விட்டு மருத்துவமனைகளுக்கு ஓடலாமா?
இலை,பூ,காய்,விதை,வேர்,பட்டை வரை அனைத்துமே அருமருந்தாகப் பயனளிப்பது புங்கன் ஆகும்.புங்கை எண்ணெயும் மருந்தாகும்.டீசலும் தயாரிக்கப் பயன்படும்.புங்கன் புண்ணாக்கு வரை அனைத்தும் இயற்கையின் வரப்பிரசாதமே.
புங்கன் இலை: காயம் பட்டவுடன் புங்கன் இலையை அரைத்துப் அவ்விடத்தில் பத்து போலப் போட்டுக் கட்டிவிட்டால் காயம் உடனே ஆறத்தொடங்கும்.ஆறியவுடன் காய்ந்த மருந்து தானே விழுந்துவிடும்.உணவு செரிக்காமை( அஜீரணம்), வயிற்று உப்புசம்,
வயிற்றுப் போக்கு போன்றவற்றை புங்கன் இலைச்சாறு குணப்படுத்தும்.புங்கன் இலைகள் நெல் வயல்களுக்கு இயற்கை உரமாகும்.
புங்கன் பூ: நீரழிவுக்கு புங்கன் பூவை வதக்கி சிறிது நெய், சிறிது பேரிச்சையுடன் அரைத்து காலை மாலை இருவேளை நெல்லி அளவு உண்ணக் குணமாகும். புங்கன் பூவை வதக்கி அரைத்து குடிநீரில் கலந்தும் பருகி வருதல் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
வயிற்றுப் போக்கு போன்றவற்றை புங்கன் இலைச்சாறு குணப்படுத்தும்.புங்கன் இலைகள் நெல் வயல்களுக்கு இயற்கை உரமாகும்.
புங்கன் பூ: நீரழிவுக்கு புங்கன் பூவை வதக்கி சிறிது நெய், சிறிது பேரிச்சையுடன் அரைத்து காலை மாலை இருவேளை நெல்லி அளவு உண்ணக் குணமாகும். புங்கன் பூவை வதக்கி அரைத்து குடிநீரில் கலந்தும் பருகி வருதல் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
புங்கன் விதை: கக்குவான் இருமல், சுவாசக் கோளாறுகளுக்கு புங்கன் விதைச் சூரணம் அருமருந்தாகும். புங்கன் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.புங்கன் விதைகள் டீசல் தயாரிக்கப் பயன்படுகிறது.
புங்கன் எண்ணெய்: புங்கன் எண்ணெய்க்
களிம்பு சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
களிம்பு சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
புங்கன் பட்டை: இதன் கசாயம் மூலநோய்க்கு நல்ல மருந்து. பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் மருந்து பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும்.
புங்கன் பால்: புண்ணை ஆற்றும் மருந்து.
இடையர்களுக்கு உடனடி மருந்து இது. சிறிது நீரில் கலந்து பருக வாயுக் கோளாறுகளைச் சரிப்படுத்தும்.
இடையர்களுக்கு உடனடி மருந்து இது. சிறிது நீரில் கலந்து பருக வாயுக் கோளாறுகளைச் சரிப்படுத்தும்.
தொழிற்சாலைக் கழிவான விஷ வாயு மீத்தைல் ஐசோ சயனைடை இது உறிஞ்சி கிரகித்துவிடும் சக்தியுள்ள மரம் எனவே தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக நட்டு சுற்றுச்சூழல் பேணலாம்.
தக்காளி போன்ற பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களை புங்கன் புண்ணாக்கு கட்டுப்படுத்தி அழிக்கவல்லது.புங்கன் எண்ணெய் வேப்பெண்ணெய் போலவே பயிர்ப் பாதுகாப்புக்கு முக்கியமானது.
டீசலுக்குப் பயன்படும் காட்டாமணக்கு நிலத்தை நாளடைவில் பாழ்படுத்தி விடும்.ஆனால் புங்கன் நிலத்தை செழிக்கச் செய்து டீசல் தரும் மரமாகும்.புங்கன் விதைகளை வீண்டிப்பதைப் பல இடங்களில் பார்ப்பதற்கு வேதனையளிக்கிறது.பயன்பாடு தெரியாமல் உள்ளோம் என்பதே உண்மை.
ஆடு மாடு மேய்ப்பவர்கள், காடுகளில் வேலை செய்வோர் புங்கன் இலைகளை வெற்றிலை போல வாயில் போட்டு அடிக்கடி மெல்லுவதைப் பார்த்து நான் அவர்களிடம் விசாரிக்கையில் ' சூட்டைத் தணிக்கும், உடலைக் குளிர வைக்கும், இரவில் பிறப்புறுப்புகளில் ஏற்படும் சூட்டுவலி வராமல் தடுக்கும்' என்றனர்.வியந்தே போனேன்.
புங்கன் மரக்காற்று குளிர்ச்சியானது. புங்கன் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்தல் நல்லது.புங்கன் மரத்தின் பயன்பாடுகள் பற்றிய விரிவான ஆய்வுகள் நடந்துவருகிறது. அக்கால கிராமங்களில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வேம்பும், புங்கனும் கட்டாயம் இருக்கும்.
புங்கன் நட்டுப் பயனடைவோம்.இயற்கை மருந்துகளை நேசிப்போம். பாரம்பரியம் காப்போம்.இயற்கையோடு பயணிப்போம்.
#அரசர்_அய்யா
No comments:
Post a Comment