Monday, October 15, 2018

உமிழ்நீர் வைத்தியம்

 #உமிழ்நீர் #வைத்தியம்
---------------------
உலகை உலுக்கும்  வியாதிகளில் ஒன்று
சர்க்கரை நோய். இந்த நோய் உமிழ்நீர் பற்றாக்குறை நோய் என்பது எத்தனைபேருக்கு தெரியும்.புரியவில்லையா?
தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் உமிழ்நீர்  தேவை.ஆனால் தற்காலத்தில் 200 மிலி உமிழ்நீர் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் . இந்த உமிழ்நீர் நாம் உணவை நன்கு மெல்லுவதன் மூலம் கிடைக்கும்.உணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும் அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது.
அப்போது எவ்வளவு உமிழ்நீர் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே உடலில் சுரக்கும் கணையநீர் பித்தநீர் பலவகை என்சைம்கள் அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன .
 நீண்டகாலம் உமிழ்நீர் அளவு குறைகின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது.
 இந்த அறிய கண்டுபிடிப்பை 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் கண்டறிந்தேன். இப்போது ஜெர்மனி பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறது.
இதனால் தான் இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்கள் அனைவரும் உணவை நன்றாக மென்று உமிழ் நீரோடு சேர்த்து மெதுவாக உண்ண கூறுகிறார்கள். இப்படி செய்தால் சர்க்கரை வியாதி மட்டுமல்ல எத்தகைய வியாதியும் அண்டாமல் மகிழ்வாக வாழலாம் என்பதோடு எந்த வகையான நோயும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
[09:27, 10/7/2018] Vetri Selvan Shell Colony: ஆண், பெண் இருவருக்குமே பொதுவாக இருக்கும் ஒரு பிரச்னை வெரிகோஸ் வெயின்!
இதுபற்றி, அப்பல்லோ மருத்துவமனை - சீனியர் கன்சல்டண்ட் வாஸ்குலர் சர்ஜன், டாக்டர். என். சேகர்;
வெரிகோஸ்வெயின் கால்களில் மட்டுமே வரக்கூடியது. இதயத்திலிருந்து மகாதமனி வழியாக வரும் சுத்தமான ரத்தம் கால்களில் காணப்படும் சிறிய ரத்தக் குழாய்களில் சென்று மீண்டும் அதே வழியில் பயணம் செய்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இதயத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்பது நியதி. இந்தச் சிறிய ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே இருக்கும் வால்வுகளைத் தாண்டி ரத்தம் செல்ல முடியாத நிலை ஏற்படும்போது வெரிகோஸ்வெயின் பிரச்னை உண்டாகிறது. பொதுவாக இந்த வால்வுகளானது ரத்தம் செல்லும்போது, “ஒரு வாசலின் இரண்டு தானியங்கி கதவுகள்’ போல செயல் படுகின்றன. ரத்தம் வந்ததும் உள்ளே அனுப்பிவிட்டு சட்டென்று மூடிக்கொள்ளும். பிறகு அந்த ரத்தம் அடுத்த வால்வுக்குச் சென்று, மீண்டும் அங்கிருந்து இன்னொரு வால்வுக்குச் செல்வது என தனது பிரயாணத்தைத் தொடரும். திறந்து மூடிக் கொள்ளும் இவ்வால்வுகள் திறந்தே இருக்கும் நிலை ஏற்பட்டால், ரத்தம் இதயத்தை நோக்கி மேலே செல்வதற்கான போதிய அழுத்தம் இல்லாமல் போகிறது. இதனால் ரத்தம் மீண்டும் இதயத்துக்கு திரும்ப முடியாத நிலை உண்டாகிறது. அதோடு அந்தச் சிறிய ரத்தக் குழாயிலேயே ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது. அப்படி அந்த இடத்திலேயே ரத்தம் மீண்டும் மீண்டும் சேரும் நிலை ஏற்படும்போது அது பழுதாகி விடுகிறது. மேலும் நாளடைவில் பெரிதாகி சுருண்டும் விடுகின்றன. இதைத்தான் வெரிகோஸ்வெயின் என்கிறோம்.
வெரிகோஸ்வெயின் பிரச்னையால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பகாலத்தின் போது, அவர்களது உடல் எடை கூடுதலாகி கீழ்நோக்கி அழுத்தம் ஏற்படுவதால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு வெரிகோஸ்வெயின் வருவதற்கு ஏதுவாகிறது. டெலிவரிக்குப் பிறகு இந்த வெரிகோஸ் வெயின் தானாகவே சரியாகும் வாய்ப்பு இருக்கிறது. பிரசவ காலத்திலும், டெலிவரிக்குப் பிறகும் கால் உறைகளை அணிந்துக் கொள்வதால் இதனைத் தவிர்க்கலாம். இப்படிச் செய்வதால், சுருங்கி பழைய நிலைக்கு வரும் சாத்தியக்கூறு உண்டு. இதுபோல் செய்யாததால்தான் நிறைய பேருக்கு வெரிகோஸ்வெயின் சரியாகாமல் பிரச்னை பெரிதாகிறது.
இந்த நோயால், நிற்கும்போது கால்களில் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கால் சருமத்தில் கறுப்பான திட்டுகள் மற்றும் கால்களில் புண்கள் உண்டாகும்போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டம். கால்களில் ரத்தம் தேங்கி உறைந்து விடம்போது சருமத்தில் கருப்பாகத் தெரிவதுடன், அரிப்பும் இருக்கும். அதை அழுத்தமாக சொரிந்து விட்டாலோ ரத்தம் பீய்ச்சி அடிக்கும். இதுபோன்ற சமயத்தில் அதற்கு நிரந்தர தீர்வாக, அறுவை சிகிச்சை செய்து பழுதான ரத்தக் குழாயை அகற்றி விடுவார்கள்.
நவீன லேசர் சிகிச்சை முறையின் மூலமாக கத்தியின்றி ரத்தமின்றி, பழுதான ரத்தக்குழாயானது முழுவதுமாக சுட்டெரிக்கப்பட்டு விடுவதும் உண்டு. சில நோயாளிகளுக்கு அவர்களது நோயின் தாக்கத்தைப் பொருத்தே நோயாளிகளுக்கான சிகிச்சை முடிவு செய்யப்படும்.
பொதுவாக அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்கள், அதிக எடையுள்ளவர்கள், கால்களை அசைக்காமல் உட்கார்ந்தே நீண்ட நேரம் பணியாற்றுபவர்கள், பிரசவம் ஆன பெண்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், ஹோட்டலில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு வெரிக்கோஸ் வெயின் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இத்தகையோர் முன்னெச்சரிக்கையாக இருந்து இதன் தாக்கத்தைக் குறைக்க இதோ டிப்ஸ்:
* குறிப்பாக, ஓய்வாக இருக்கும்போது கால்களை உயரமாக தூக்கி வைத்துக் கொள்வது நல்லது. இதனால் கால்களிலிருந்து இதயத்துக்கு ரத்தம் சீராகச் செல்லும் வாய்ப்பு அதிகம். அதனால் வெரிக்கோஸ் வெயின் பாதிப்பைக் குறைக்கலாம்.
* வெரிகோஸ்வெயின் காணப்படும் இடங்களில் காலைச் சுற்றி பாண்டேஜ் போட்டுக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
* கால்களில் இறுக்கமான காலுறைகளை அணிவது உடனடி பலனைக் கொடுக்கும்.
* விமானப் பயணத்தின் போதும் உட்கார்ந்து வேலை செய்யும்போதும் கால்களைத் தையல் மெஷினில் வேலை செய்வதுபோல் ஆட்டிக் கொண்டே இருப்பது நல்லது.

No comments:

Post a Comment