Sunday, August 19, 2018

குடிபழக்கத்தைகைவிட

குடிபழக்கத்தைகைவிட

#குடியை_மறக்க……
#குடியைநிறுத்த………
#என்தாய்மார்களின்தாலி#நிலைக்க_காப்பாற்ற……

இராம். கதிர்வேலு...


#குடிப்பழக்கத்திலிருந்து ♦#முழுவிடுதலைபெற ...

#தேவையானவை:-

சீரகம் பொடியாக 200 கிராம்
கரிசலாங்கண்ணி சாறு 400 மில்லி
சுக்கு தூள் 100 கிராம்
நாட்டுசர்க்கரை 200 கிராம்

#செய்முறை:

சீரகபொடியை பீங்கான்பாத்திரத்தில்
இட்டு அதில் மூழ்கும் அளவு கரிசாலை சாறுவிட்டு நன்கு ஊறி
காய்ந்தபின் இடித்து பொடியாக்கி
அதில் சுக்குபொடியை கலந்து
பின் நாட்டு சர்க்கரையை கலந்தால்
சூரணம் தாயார்.
இச்சூரணரத்தை காலை ,மாலை
ஆகாரத்திற்கு முன் வேளைக்கு ஒரு
டீஸ்பூன் வீதம் பாலுடன் கலந்து
இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடிக்கவேண்டும் என்கிற எண்ணம் வராது.
(சூரணம் தீர்ந்தால் புதிதாக தயாரித்துக்
கொள்ளவும்.)
♦ "பிடி சோம்பு
மண் சட்டியில் போட்டு இரண்டு
கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு
இரவில் கொதிக்கவைத்து
காலையில் வடக்கட்டி வெறும்
வயிற்றில் குடித்து வந்தால்
குடிபழக்கம் உள்ளவர்கள்
குடிபோதையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
♦ஏலக்காய் விதை எலுமிச்சை விதை
இரண்டையும் சம அளவு எடுத்து வெயிலில் காயவைத்து –
அல்லது பச்சையாக இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் ஒரு ஸ்பூன் மீன் குழம்பு- அல்லது கறிகுழம்பு எப்படியாவது குடிகாரர்களுக்கு தெரியாமல் 30 நாள் சாப்பிட கொடுத்தால்- குடிகார்கள் குடித்தால் ஒத்துக்கொள்ளாது வாந்தி வரும் பிறகு குடிக்க மாட்டார்கள் .
♦ வில்வம் இலை
1 கைபிடி
மிளகு 1 கைபிடி
மல்லி 1 கைபிடி
இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து
200 Ml தண்ணீரில் கொதிக்க வைத்து வடி கெட்டி பணங்கற்கண்டு சேர்த்து காலை வெறும் வயிற்றில் 48 நாள் குடிக்க வேண்டும்.
♦ #குடிபுகை_இரண்டும்
#__மறக்க…
நார்த்தங்காய்
ஊறுகாய் காலையில்
வெறும் வயிற்றில்
தாளிக்காத ஊறுகாய்
தினமும் ஒரு துண்டு
சாப்பிட்டு வந்தால்
பத்தே நாட்களில்
புகை குடி இரண்டிற்க்கும்
விடுதலை.
குடித்து கெட்டுபோன கல்லீரல்,
மண்ணீரல் ஆரோக்கியம் பெறும்.
#மேலும்சிலகுறிப்புகள்……
√ மது பழக்கம் உள்ளவர்கள் ஆப்பிள் சாறு பருகுவதால் உடலில் உள்ள அசுத்தங்களை ( மது போதைக்கு காரணமான விஷத்தன்மை ) நீக்க உதவுகிறது.
இராம். கதிர்வேலு...
√ ஒரு கிளாஸ் தண்ணீரில் 4 - 5 பேரிச்சம்பழங்களை ஊரவைத்து குடிக்கவும். ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது மது பழக்கத்தை கைவிட உதவுகிறது.
√ பாகற்காய் அரைத்து சாறு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் மது பழக்கத்தை தடுக்க உதவுகிறது.
√ மது பழக்கத்தை தடுக்க தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்புகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் மது பழக்கத்தை கைவிட உதவுகிறது.
√ கேரட் ஜூஸ் உட்கொள்வதால் மது குடிப்பதை அறவே தவிர்க்க உதவுகிறது. மது என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கேரட் ஜூஸ் பருகுங்கள்.
√ எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கூட மது பழக்கத்தை மறக்க செய்கிறது. தினமும் குடிப்பது நல்லது, ஆனால் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.
√ வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. மது குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை குணப்படுத்த உதவுகிறது.
குடிப்பழக்கத்திலிருந்து முழு விடுதலை பெற .....
#மேலும்கடைபிடிக்க#வேண்டியவை:
* குடி நண்பர்கள் நட்பு தவிர்கவும்.
* மதுக்கடை வழியாக போவதை தவிர்கவும்.
* தியான பயிற்சி கற்று தினசரி செய்யவும்.
* ஆன்மீகத்தில் இடுபடுதல்.
* பசியோடு இருக்ககூடாது.
* இரவு கண்விழிப்புகூடாது.
* ஓய்வு நேரத்தை குடும்பத்தினருடன்
கழிக்கவும்.
* ஓய்வு நேரத்தில் ஏதேனும் பொது
சேவையில் பங்குகொள்ள
வேண்டும்.
இந்த நடைமுறைகள் அனைத்தையும்
தவராமல் கடைபிடித்தால்
குடிநோயிலிருந்து முழு விடுதலை பெறலாம்...……

நன்றி:-
இராம். கதிர்வேலு....

1 comment:

  1. நன்றி நல்ல பதிவு செய்து உள்ளீர்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete