மருந்து மாஃபியாக்களும்.. மரபு வியாபாரிகளும் - கார்ட்டூனிஸ்ட் பாலா
..
--------------------------------------------------------------------------------
முதலிலே சொல்லிவிடுகிறேன்..
மரபு மருத்துவத்திற்கு அல்லது ஆங்கில மருத்துவத்திற்கு ஆதரவான பதிவு அல்ல இது.
இரண்டு தரப்பு போராளிகளுக்கு நடுவில் ஒரு நோயாளிகளின் தரப்பின் குரலாக மட்டும் இதை பதிவு செய்கிறேன்.
பெரும்பாலும் என் அனுபவங்களில் இருந்துதான் பேசுவேன். இந்த பதிவும் அப்படிதான்.
குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்ட என் அப்பாவை ஒருநாள் மிகவும் ஆபத்தான நிலையில் மும்பையில் உள்ள ஜக்ஜீவன் ராம் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மருத்துவர்கள் சோதித்துப்பார்த்துவிட்டு உறவினர்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று கை விரித்துவிட்டார்கள்.
அந்த ஆங்கில மருத்துவர்களிடம் , ``என்ன ஆனாலும் சரி.. முயற்சி செய்யுங்க” என்று கெஞ்சி கூத்தாடியதில் அட்மிஷன் போட்டு சிகிச்சையளிக்க ஒப்புக்கொண்டார்கள். இரவு பகலாக அவருக்கு அவர்கள் சிரமம் எடுத்து அளித்த சிகிச்சையில் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்ட என் தந்தை நல்ல நிலைக்கு வீடு திரும்பினார். மேலும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.
எங்களுடைய முதல் குழந்தை நான்கு மாத கருவாக இருக்கும்போதே எங்களை விட்டுப்போனது. முதல் கரு உருவாதல் கொடுக்கும் மகிழ்ச்சியும் இழப்பும் அத்தனை எளிதில் மறக்கக் கூடியது அல்ல.
பெரம்பூர் அருகே இருக்கும் பெண் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனைக்காக போயிருந்தோம். ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் பார்த்துவிட்டு கர்ப்பப்பை கட்டி என்று பிட்டு போட்டார்.
அப்புறம் வர்றோம் என்று கும்பிடுபோட்டுவிட்டு கிட்டத்தட்ட தப்பி வெளியே ஓடி வந்தோம். அடுத்த மாதமே இளமாறன் கருவாக உருவானான்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும்.. பல மாதங்களாக கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். இருசக்கர வாகனத்தில் சுற்றுவதால் இந்த வலி இருக்கும் என்று நினைத்து ஆங்கில மருத்துவ நண்பர்களின் பரிந்துரையின் பெயரில் சில ஆர்த்தோ சிறப்பு மருத்துவர்கள் முன் போய் அமர்ந்தேன்.
அவர்கள் வழக்கம்போல் எக்ஸ்ரே உள்ளிட்ட லொட்டு லொசுகளையெல்லாம் எடுத்துபார்த்துவிட்டு டிஸ்கு தேய்மானம்.. அது இது என்று பீதியை கிளப்பினார்கள். கொடுத்த மருந்துகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அப்போதுதான் எதேச்சையாக நண்பர் இயக்குனர் செந்தமிழனிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதுகுவலி குறித்து சொன்னேன். அவர் ஏங்கல்ஸ் ராஜா என்ற அக்குபிரஷர் மருத்துவரை பார்க்க சொன்னார்.
சென்னை கெல்லீசில் அவரது சிகிச்சை மையம் இருந்தது. அக்குபஞ்சர் மருத்துவம் என்றதும் சீன படங்களில் பார்த்ததுபோல் உடம்பெல்லாம் ஊசி வச்சு குத்துவாரோ என்றெல்லாம் யோசனையுடன் தான் போனேன். அங்கு போனால் திருவிழா கூட்டம்போல் இருந்தது. வரிசையில் அமர்ந்து என் முறை வந்ததும் உள்ளே சென்றேன்.
நான் என் உடல்வலி குறித்து விலாவாரியாக சொல்லலாம் என்று நினைத்து வாயைத்திறந்தால்..
அவர் கையை கொடுங்க என்றார்.
கையை நீட்டினேன். நாடி பிடித்து பார்த்துவிட்டு நடுவிரலின் நடுபகுதியில் ஒரு பத்து நொடிகள் அழுத்திவிட்டு ``சரியாகிரும்.. ஒரு பதினைஞ்சு நாள் கழிச்சு வாங்க..” என்றார்.
இதை படிக்கும்போது, உங்களுக்கே லூசுத்தனமாக இருக்கிறதல்லவா.. எனக்கும் அப்படிதான் இருந்தது. நாம என்ன பிரச்சினைக்கு வந்திருக்கிறோம்.. இந்தாளு கையைப்பிடிச்சு பார்த்துட்டு சரியாகிரும் போங்கனு சொல்றாரு.. சரியான பிராடு குரூப்பு போல.. `கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்’ என்ற மனநிலையில் வெளியே வந்தேன்.
கீழே விகடனில் இருந்த இப்போது மல்லிகை மகள் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் ம.கா.சிவஞானம் (ம.கா.சிவஞானம் ) நின்று கொண்டிருந்தார். அவரிடம், ``என்ன சார் இது.. காமெடியா இருக்கு.. ” என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டிருந்தேன்.
ஆனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. அப்படி நக்கலாக சொல்லிக்கொண்டிருந்த என் குரல் மாறியது. காரணம் ஏங்கல்ஸ் ராஜாவை சந்தித்து கையை நீட்டுவதற்கு முன்.. என் முதுகில் மிளகாயை தேய்தால் எப்படி எரியுமோ அப்படி ஒரு எரிச்சலும் வலியும் இருந்தது.
அந்த வலி சிகிச்சை எடுத்த ஐந்து நிமிடத்தில் மாயமாய் மறைந்திருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ம.கா.சியிடம் ``என்னங்க ஆச்சர்யமா இருக்கு..” என்று நம்ப முடியாமல் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அதன்பிறகு மீண்டும் பதினைந்து நாள் கழித்து சென்றபோது, ``என் உடம்புக்கு என்ன பிரச்சினை.. எதனால் அந்த முதுகுவலி வந்தது” என்று கேட்டேன்.
``உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.. இரவு எத்தனை மணிக்கு படுப்பீங்க”னு சிரிச்சுக்கிட்டே கேட்டார்.
இரவு தான் உட்கார்ந்து படம் வரைவேன்.. எழுதுவேன் என்பதால் தூங்குறதுக்கு இரண்டு மணிக்கு மேல ஆகிரும் என்றேன்.
அதுதான் உங்க பிரச்சினை.. இரவு தாமதமா தூங்குறதால உருவாகும் உடல் சூட்டால் உங்க வயிறு கொதிக்குறது. அதனால் ஏற்படும் வாயுவால் ஏற்படும் செரிமான கோளாறால் இந்த முதுகுவலி உருவாகியிருக்கிறது.
நாடி பிடித்து பார்த்து உடலில் இருக்கும் பஞ்சபூதத்தில் வாயுவை கட்டுப்படுத்தும் சிகிச்சை கொடுத்திருக்கிறேன்.
நீங்க இரவு பத்து மணிக்குள் படுத்துருங்க.. இனி வலி வராது.. ஒருவேளை அப்படி வலி ஏற்பட்டால் என்னிடம் கூட வர வேண்டாம்.. நல்ல தூங்கி எந்திருங்க.. சரியாப்போயிரும் என்றார்.
இவ்வளவுதான் விசயம்.. இரவு அதிக நேரம் விழிக்க கூடாது.. செரிமான பிரச்சினை ஏற்படும்.. வாயுப்பிரச்சினை உருவாகும். அது பல உபாதைகளுக்கு காரணமாக இருக்கும்.. முதுகுவலியும் அதனால் வரும் என்ற ஒரு எளிய விசயத்தை கண்டுபிடித்து சொல்ல நான் சந்தித்த ஆங்கில மருத்துவர்களால் சொல்ல முடியவில்லை.
அதை எம்.பி.பி.எஸ் படிக்காத ஒருவர் சொன்னார். என் பிரச்சினை சரியானது. இதேப்போல் என் நண்பர் ஒருவர் நீண்ட நாள் குழந்தை இல்லாம பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து மனச்சோர்வாகிப்போயிருந்தார். ஏங்கல்ஸை போய் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
இரண்டு முறை கணவன் மனைவி இருவருக்கும் நாடி பிடித்துப்பார்த்து சிகிச்சை கொடுத்தார்.
அடுத்த இரு மாதங்களில் அந்த நண்பரின் மனைவி மாசமானார். இப்போது ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது அவர்களுக்கு.
அதே ஏங்கல்ஸ் ராஜாவிடம் வேறு சில பிரச்சினைகளுக்கு போயிருக்கிறேன். அவரது சிகிச்சையில் அந்த பிரச்சினை குணமாகவில்லை. ஆங்கில மருத்துவத்தில் தான் குணமானது..
இதை எப்படி விளக்க முடியும். எனக்கு ஆங்கில மருத்துவமும் தெரியாது.. பாரம்பரிய மருத்துவமும் தெரியாது.. எனக்கு அந்த மருத்துவமுறை தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் ஒரு நோயாளியாக எங்களுக்கு பிரச்சினை தீர வேண்டும்.. அவ்வளவுதான்.
ஆங்கில மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்கள் என்று இரு தரப்பும் ஒருவரையொருவர் மட்டம் தட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆங்கில மருத்துவத்தின் தோற்றம் இரு நூற்றாண்டுகள் இருக்கலாம். அதற்கு முன் இவ்வளவு மக்களையும் நோய் நொடியில் இருந்து பாதுகாத்தது ஒவ்வொரு இனக்குழுவினாலும் கண்டுபிடிக்கப்பட்ட மரபு மருத்துவம் தான்.
அதனால் நாங்க நவீன மருத்துவத்தை புறக்கணிக்கிறோம் என்றெல்லாம் சொல்வது அபத்தம்.
நவீன மருத்துவம் அது ஒரு வரப்பிரசாதம் என்பது மறுக்க முடியாதது. அதனுடைய வளர்ச்சியும் வீச்சும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் போகிறது.
வரம் என்று ஒன்று இருக்குமானால் சாபம் என்பதும் இருக்கும். நவீன மருத்துவத்தின் வளர்ச்சியோடு மருந்து வியாபாரிகளின் வர்த்தகமும் வளர்ந்து வருகிறது. அந்த வர்த்தகத்திற்காக மனிதர்கள் முதலீடாக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.
மருத்துவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.. ஆனால் மருந்து கம்பெனிகள் முழுக்க நல்லவைகளாக இருக்க முடியாது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், மருந்து விற்க வேண்டுமானால் நோய்கள் இருக்க வேண்டும்.
இதில் குழந்தை என்பது மிகப்பெரிய மார்க்கெட். ஒவ்வொரு உயிரும் தன் ரத்தத்தை இந்த பூமியில் பரப்பவே விரும்பும். சிலருக்கு அது சாத்தியமில்லாத சூழலில் அந்த குழந்தை வரம் என்பது மிகப்பெரிய வர்த்தகம்.
இந்த வர்த்தகத்திற்கு அவசியமில்லாத ஒரு வாழ்வுமுறையை வலியுறுத்தும் பாரம்பரிய மருத்துவமுறையை முன்னெடுக்கும் மரபு குழுக்கள் மீது இயல்பாகவே ஆங்கில மருத்துவத்திற்கு எரிச்சல் வரத்தான் செய்யும்.
அதே சமயம் மரபு என்பதும் வியாபாரமாகிக்கொண்டுதான் வருகிறது. எங்க பார்த்தாலும் மரபு பாரம்பரியம் என்ற பெயரில் சிலர் கடையை விரித்துவிடுகிறார்கள். மூலிகை கோழி என்று ஒரு கோழிக் கடையை பார்த்தேன். இதுதான் பிரச்சினை.
மூலிகை கோழி எப்படி இருக்க முடியும்.. கோழினா புழு பூச்சி அரிசி என எல்லாம் தின்றுதானே வளர்ந்து இருக்க முடியும். இதில் மூலிகை எங்கிருந்து வந்தது..
மக்கள் மீண்டும் மரபை நோக்கி திரும்ப விரும்புகிறார்கள் என்றதும் அதை காசாக்கவும் இதுபோல் சில கும்பல் தயாராகத்தான் செய்யும்.
இதில் ஒரு பெண் வீட்டிலே பிரசவம் பார்த்து இறந்துவிட்ட சூழல் ஜீரணிக்க முடியாதது. யூடியூப் பார்த்தெல்லாம் பிரசவம் பார்க்க கற்றுக்கொள்வது என்பதெல்லாம் கொடூரத்தின் உச்சம்.
மகப்பேறு என்பது இரு உயிர்கள் சம்பந்தப்பட்டது. அது ஆங்கில மருத்துவோமோ.. மரபு மருத்துவமோ.. ஒரு முறையான மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் நடக்க வேண்டும்.
ஆங்கில மருத்துவமனைகளிலும் மகப்பேறு காலத்தில் பிரசவம் சிக்கலாகி தாயும் சேயும் இறக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது பாரம்பரிய முறையிலும் நடக்கும்.
இதில் பாரம்பரிய மருத்துவமுறை குறித்து பேசுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற தொனியில் ஆங்கில மருத்துவ ஆதரவாளர்கள் குதிக்கிறார்கள்.
இதில் ஒரு அறிவாளி, மரபை ஆதரிக்கும் நான் நவீன மருத்துவர் பரிந்துரைத்த கண்ணாடி போட்டிருப்பது குறித்து.. கேள்வி எழுப்புகிறார்.
பதிலுக்கு, நவீனத்தை ஆதரிப்பவர்கள் எல்லாம் சோத்துக்கு பதிலாக கம்ப்யூட்டரை தின்னுவிட்டு ஆசிட்டையா குடிக்கிறீர்கள் என்று நான் கேட்டால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.
எனக்கு ஒரு விசயம் தெரியவில்லை என்பதாலயே அது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.
ஆகச்சிறந்த நவீன கருவிகளையும் உலகின் பிரபலமான மருத்துவர்களை கொண்ட குழுவையும் வைத்திருந்த மருத்துவமனையில் தான் ஜெயாவின் மரணம் நடந்தது.
யாராலும் தடுக்க முடிந்ததா..
ஆக மருந்து மாஃபியாக்களுக்கும் மரபு வியாபாரிகளுக்கும் நடுவில் நோயாளிகளின் தரப்பாக நான் முன்வைப்பது ஒன்றுதான்..
ஒவ்வொரு மருத்துவமுறைக்கும் சில சிறப்புகள் இருக்கின்றன. எந்த மருத்துவமுறையை நாட வேண்டும் என்பதை தனிநபர் தான் முடிவு செய்ய வேண்டும்.. மருந்து வியாபாரிகள் அல்ல..!
-
கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
5-8-18
..
--------------------------------------------------------------------------------
முதலிலே சொல்லிவிடுகிறேன்..
மரபு மருத்துவத்திற்கு அல்லது ஆங்கில மருத்துவத்திற்கு ஆதரவான பதிவு அல்ல இது.
இரண்டு தரப்பு போராளிகளுக்கு நடுவில் ஒரு நோயாளிகளின் தரப்பின் குரலாக மட்டும் இதை பதிவு செய்கிறேன்.
பெரும்பாலும் என் அனுபவங்களில் இருந்துதான் பேசுவேன். இந்த பதிவும் அப்படிதான்.
குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்ட என் அப்பாவை ஒருநாள் மிகவும் ஆபத்தான நிலையில் மும்பையில் உள்ள ஜக்ஜீவன் ராம் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மருத்துவர்கள் சோதித்துப்பார்த்துவிட்டு உறவினர்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று கை விரித்துவிட்டார்கள்.
அந்த ஆங்கில மருத்துவர்களிடம் , ``என்ன ஆனாலும் சரி.. முயற்சி செய்யுங்க” என்று கெஞ்சி கூத்தாடியதில் அட்மிஷன் போட்டு சிகிச்சையளிக்க ஒப்புக்கொண்டார்கள். இரவு பகலாக அவருக்கு அவர்கள் சிரமம் எடுத்து அளித்த சிகிச்சையில் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்ட என் தந்தை நல்ல நிலைக்கு வீடு திரும்பினார். மேலும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.
எங்களுடைய முதல் குழந்தை நான்கு மாத கருவாக இருக்கும்போதே எங்களை விட்டுப்போனது. முதல் கரு உருவாதல் கொடுக்கும் மகிழ்ச்சியும் இழப்பும் அத்தனை எளிதில் மறக்கக் கூடியது அல்ல.
பெரம்பூர் அருகே இருக்கும் பெண் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனைக்காக போயிருந்தோம். ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் பார்த்துவிட்டு கர்ப்பப்பை கட்டி என்று பிட்டு போட்டார்.
அப்புறம் வர்றோம் என்று கும்பிடுபோட்டுவிட்டு கிட்டத்தட்ட தப்பி வெளியே ஓடி வந்தோம். அடுத்த மாதமே இளமாறன் கருவாக உருவானான்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும்.. பல மாதங்களாக கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். இருசக்கர வாகனத்தில் சுற்றுவதால் இந்த வலி இருக்கும் என்று நினைத்து ஆங்கில மருத்துவ நண்பர்களின் பரிந்துரையின் பெயரில் சில ஆர்த்தோ சிறப்பு மருத்துவர்கள் முன் போய் அமர்ந்தேன்.
அவர்கள் வழக்கம்போல் எக்ஸ்ரே உள்ளிட்ட லொட்டு லொசுகளையெல்லாம் எடுத்துபார்த்துவிட்டு டிஸ்கு தேய்மானம்.. அது இது என்று பீதியை கிளப்பினார்கள். கொடுத்த மருந்துகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அப்போதுதான் எதேச்சையாக நண்பர் இயக்குனர் செந்தமிழனிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதுகுவலி குறித்து சொன்னேன். அவர் ஏங்கல்ஸ் ராஜா என்ற அக்குபிரஷர் மருத்துவரை பார்க்க சொன்னார்.
சென்னை கெல்லீசில் அவரது சிகிச்சை மையம் இருந்தது. அக்குபஞ்சர் மருத்துவம் என்றதும் சீன படங்களில் பார்த்ததுபோல் உடம்பெல்லாம் ஊசி வச்சு குத்துவாரோ என்றெல்லாம் யோசனையுடன் தான் போனேன். அங்கு போனால் திருவிழா கூட்டம்போல் இருந்தது. வரிசையில் அமர்ந்து என் முறை வந்ததும் உள்ளே சென்றேன்.
நான் என் உடல்வலி குறித்து விலாவாரியாக சொல்லலாம் என்று நினைத்து வாயைத்திறந்தால்..
அவர் கையை கொடுங்க என்றார்.
கையை நீட்டினேன். நாடி பிடித்து பார்த்துவிட்டு நடுவிரலின் நடுபகுதியில் ஒரு பத்து நொடிகள் அழுத்திவிட்டு ``சரியாகிரும்.. ஒரு பதினைஞ்சு நாள் கழிச்சு வாங்க..” என்றார்.
இதை படிக்கும்போது, உங்களுக்கே லூசுத்தனமாக இருக்கிறதல்லவா.. எனக்கும் அப்படிதான் இருந்தது. நாம என்ன பிரச்சினைக்கு வந்திருக்கிறோம்.. இந்தாளு கையைப்பிடிச்சு பார்த்துட்டு சரியாகிரும் போங்கனு சொல்றாரு.. சரியான பிராடு குரூப்பு போல.. `கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்’ என்ற மனநிலையில் வெளியே வந்தேன்.
கீழே விகடனில் இருந்த இப்போது மல்லிகை மகள் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் ம.கா.சிவஞானம் (ம.கா.சிவஞானம் ) நின்று கொண்டிருந்தார். அவரிடம், ``என்ன சார் இது.. காமெடியா இருக்கு.. ” என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டிருந்தேன்.
ஆனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.. அப்படி நக்கலாக சொல்லிக்கொண்டிருந்த என் குரல் மாறியது. காரணம் ஏங்கல்ஸ் ராஜாவை சந்தித்து கையை நீட்டுவதற்கு முன்.. என் முதுகில் மிளகாயை தேய்தால் எப்படி எரியுமோ அப்படி ஒரு எரிச்சலும் வலியும் இருந்தது.
அந்த வலி சிகிச்சை எடுத்த ஐந்து நிமிடத்தில் மாயமாய் மறைந்திருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. ம.கா.சியிடம் ``என்னங்க ஆச்சர்யமா இருக்கு..” என்று நம்ப முடியாமல் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அதன்பிறகு மீண்டும் பதினைந்து நாள் கழித்து சென்றபோது, ``என் உடம்புக்கு என்ன பிரச்சினை.. எதனால் அந்த முதுகுவலி வந்தது” என்று கேட்டேன்.
``உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.. இரவு எத்தனை மணிக்கு படுப்பீங்க”னு சிரிச்சுக்கிட்டே கேட்டார்.
இரவு தான் உட்கார்ந்து படம் வரைவேன்.. எழுதுவேன் என்பதால் தூங்குறதுக்கு இரண்டு மணிக்கு மேல ஆகிரும் என்றேன்.
அதுதான் உங்க பிரச்சினை.. இரவு தாமதமா தூங்குறதால உருவாகும் உடல் சூட்டால் உங்க வயிறு கொதிக்குறது. அதனால் ஏற்படும் வாயுவால் ஏற்படும் செரிமான கோளாறால் இந்த முதுகுவலி உருவாகியிருக்கிறது.
நாடி பிடித்து பார்த்து உடலில் இருக்கும் பஞ்சபூதத்தில் வாயுவை கட்டுப்படுத்தும் சிகிச்சை கொடுத்திருக்கிறேன்.
நீங்க இரவு பத்து மணிக்குள் படுத்துருங்க.. இனி வலி வராது.. ஒருவேளை அப்படி வலி ஏற்பட்டால் என்னிடம் கூட வர வேண்டாம்.. நல்ல தூங்கி எந்திருங்க.. சரியாப்போயிரும் என்றார்.
இவ்வளவுதான் விசயம்.. இரவு அதிக நேரம் விழிக்க கூடாது.. செரிமான பிரச்சினை ஏற்படும்.. வாயுப்பிரச்சினை உருவாகும். அது பல உபாதைகளுக்கு காரணமாக இருக்கும்.. முதுகுவலியும் அதனால் வரும் என்ற ஒரு எளிய விசயத்தை கண்டுபிடித்து சொல்ல நான் சந்தித்த ஆங்கில மருத்துவர்களால் சொல்ல முடியவில்லை.
அதை எம்.பி.பி.எஸ் படிக்காத ஒருவர் சொன்னார். என் பிரச்சினை சரியானது. இதேப்போல் என் நண்பர் ஒருவர் நீண்ட நாள் குழந்தை இல்லாம பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து மனச்சோர்வாகிப்போயிருந்தார். ஏங்கல்ஸை போய் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
இரண்டு முறை கணவன் மனைவி இருவருக்கும் நாடி பிடித்துப்பார்த்து சிகிச்சை கொடுத்தார்.
அடுத்த இரு மாதங்களில் அந்த நண்பரின் மனைவி மாசமானார். இப்போது ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது அவர்களுக்கு.
அதே ஏங்கல்ஸ் ராஜாவிடம் வேறு சில பிரச்சினைகளுக்கு போயிருக்கிறேன். அவரது சிகிச்சையில் அந்த பிரச்சினை குணமாகவில்லை. ஆங்கில மருத்துவத்தில் தான் குணமானது..
இதை எப்படி விளக்க முடியும். எனக்கு ஆங்கில மருத்துவமும் தெரியாது.. பாரம்பரிய மருத்துவமும் தெரியாது.. எனக்கு அந்த மருத்துவமுறை தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் ஒரு நோயாளியாக எங்களுக்கு பிரச்சினை தீர வேண்டும்.. அவ்வளவுதான்.
ஆங்கில மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்கள் என்று இரு தரப்பும் ஒருவரையொருவர் மட்டம் தட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆங்கில மருத்துவத்தின் தோற்றம் இரு நூற்றாண்டுகள் இருக்கலாம். அதற்கு முன் இவ்வளவு மக்களையும் நோய் நொடியில் இருந்து பாதுகாத்தது ஒவ்வொரு இனக்குழுவினாலும் கண்டுபிடிக்கப்பட்ட மரபு மருத்துவம் தான்.
அதனால் நாங்க நவீன மருத்துவத்தை புறக்கணிக்கிறோம் என்றெல்லாம் சொல்வது அபத்தம்.
நவீன மருத்துவம் அது ஒரு வரப்பிரசாதம் என்பது மறுக்க முடியாதது. அதனுடைய வளர்ச்சியும் வீச்சும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் போகிறது.
வரம் என்று ஒன்று இருக்குமானால் சாபம் என்பதும் இருக்கும். நவீன மருத்துவத்தின் வளர்ச்சியோடு மருந்து வியாபாரிகளின் வர்த்தகமும் வளர்ந்து வருகிறது. அந்த வர்த்தகத்திற்காக மனிதர்கள் முதலீடாக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.
மருத்துவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.. ஆனால் மருந்து கம்பெனிகள் முழுக்க நல்லவைகளாக இருக்க முடியாது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், மருந்து விற்க வேண்டுமானால் நோய்கள் இருக்க வேண்டும்.
இதில் குழந்தை என்பது மிகப்பெரிய மார்க்கெட். ஒவ்வொரு உயிரும் தன் ரத்தத்தை இந்த பூமியில் பரப்பவே விரும்பும். சிலருக்கு அது சாத்தியமில்லாத சூழலில் அந்த குழந்தை வரம் என்பது மிகப்பெரிய வர்த்தகம்.
இந்த வர்த்தகத்திற்கு அவசியமில்லாத ஒரு வாழ்வுமுறையை வலியுறுத்தும் பாரம்பரிய மருத்துவமுறையை முன்னெடுக்கும் மரபு குழுக்கள் மீது இயல்பாகவே ஆங்கில மருத்துவத்திற்கு எரிச்சல் வரத்தான் செய்யும்.
அதே சமயம் மரபு என்பதும் வியாபாரமாகிக்கொண்டுதான் வருகிறது. எங்க பார்த்தாலும் மரபு பாரம்பரியம் என்ற பெயரில் சிலர் கடையை விரித்துவிடுகிறார்கள். மூலிகை கோழி என்று ஒரு கோழிக் கடையை பார்த்தேன். இதுதான் பிரச்சினை.
மூலிகை கோழி எப்படி இருக்க முடியும்.. கோழினா புழு பூச்சி அரிசி என எல்லாம் தின்றுதானே வளர்ந்து இருக்க முடியும். இதில் மூலிகை எங்கிருந்து வந்தது..
மக்கள் மீண்டும் மரபை நோக்கி திரும்ப விரும்புகிறார்கள் என்றதும் அதை காசாக்கவும் இதுபோல் சில கும்பல் தயாராகத்தான் செய்யும்.
இதில் ஒரு பெண் வீட்டிலே பிரசவம் பார்த்து இறந்துவிட்ட சூழல் ஜீரணிக்க முடியாதது. யூடியூப் பார்த்தெல்லாம் பிரசவம் பார்க்க கற்றுக்கொள்வது என்பதெல்லாம் கொடூரத்தின் உச்சம்.
மகப்பேறு என்பது இரு உயிர்கள் சம்பந்தப்பட்டது. அது ஆங்கில மருத்துவோமோ.. மரபு மருத்துவமோ.. ஒரு முறையான மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் நடக்க வேண்டும்.
ஆங்கில மருத்துவமனைகளிலும் மகப்பேறு காலத்தில் பிரசவம் சிக்கலாகி தாயும் சேயும் இறக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது பாரம்பரிய முறையிலும் நடக்கும்.
இதில் பாரம்பரிய மருத்துவமுறை குறித்து பேசுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற தொனியில் ஆங்கில மருத்துவ ஆதரவாளர்கள் குதிக்கிறார்கள்.
இதில் ஒரு அறிவாளி, மரபை ஆதரிக்கும் நான் நவீன மருத்துவர் பரிந்துரைத்த கண்ணாடி போட்டிருப்பது குறித்து.. கேள்வி எழுப்புகிறார்.
பதிலுக்கு, நவீனத்தை ஆதரிப்பவர்கள் எல்லாம் சோத்துக்கு பதிலாக கம்ப்யூட்டரை தின்னுவிட்டு ஆசிட்டையா குடிக்கிறீர்கள் என்று நான் கேட்டால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.
எனக்கு ஒரு விசயம் தெரியவில்லை என்பதாலயே அது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.
ஆகச்சிறந்த நவீன கருவிகளையும் உலகின் பிரபலமான மருத்துவர்களை கொண்ட குழுவையும் வைத்திருந்த மருத்துவமனையில் தான் ஜெயாவின் மரணம் நடந்தது.
யாராலும் தடுக்க முடிந்ததா..
ஆக மருந்து மாஃபியாக்களுக்கும் மரபு வியாபாரிகளுக்கும் நடுவில் நோயாளிகளின் தரப்பாக நான் முன்வைப்பது ஒன்றுதான்..
ஒவ்வொரு மருத்துவமுறைக்கும் சில சிறப்புகள் இருக்கின்றன. எந்த மருத்துவமுறையை நாட வேண்டும் என்பதை தனிநபர் தான் முடிவு செய்ய வேண்டும்.. மருந்து வியாபாரிகள் அல்ல..!
-
கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
5-8-18
No comments:
Post a Comment