சைவ உணவாளர்களைக் காட்டிலும், அசைவர்களே அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதாகச் சொல்கிறது ஆஸ்திரியாவின் க்ராஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு முடிவு !
சைவர்களுக்கு, கொழுப்புச் சத்து குறைபாடு மற்றும் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்வதால், கேன்சர், ஆஸ்துமா, அலர்ஜி, மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் அதிகமுண்டு என்கிறது ஆய்வறிக்கை !
அசைவர்களோடு ஒப்பிடும்போது, சைவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டதாக இல்லை. அதிக அளவில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வின் முடிவுகள் சைவர்களை புரட்டோ புரட்டு என்று புரட்டிப் போட்டுக்கொண்டே போகிறது ( நன்றி - தமிழ் இந்து 16/11/2018 வெள்ளி, பக்கம் எண் 7 )
ஆனா பாருங்க, நம்மூர்கள்ல இந்த அசைவர்களில் பெரும்பாலோர், உள்ளூரக் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையோடவே இருப்பாங்க, குறிப்பா பெண்கள் !
அதைப் பாவச்செயல்களா கருதி ஒரு குற்றவுணர்வு அவர்களை உறுத்திக்கிட்டே இருக்கும். அதனாலேயே, வாரத்துல அஞ்சு நாள், மாசத்துல 25 நாட்கள், வருஷத்துல புரட்டாசி, கார்த்திகைன்னு பல மாதங்கள், அசைவம் உண்ணாம தவிர்ப்பாங்க. சார்ந்தோரையும் மிரட்டி உண்ணச் செய்யாம பணிய வைப்பாங்க 

சைவர்கள் என்னமோ தங்கள் உணவுதான் எந்த உயிரையும் துன்புறுத்துவதில்லைன்னு இவங்ககிட்ட சதா சொல்லிச் சொல்லி, அப்படி அவங்களச் செய்ய வைக்குது போல ? ஆக்ச்சுவலா சைவர்களின் பிரதான உணவான பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ் வகைகளுக்காக பல கோடி உயிரனங்கள் சாகும்வரை துன்புறுகின்றன என்பதுதான் பேருண்மை !
கமல் போன்ற முற்போக்கு முகமூடிகள் கூடச் சமயங்களில், சைவ உணவு சாந்தம், அசைவ உணவு மூர்க்கம் என உளறிக் கொட்டுமளவு, நோஞ்சான் சைவர்கள், அசைவர்களை மூளைச்சலவை செய்திருப்பதாகவே இதைக் காண முடிகிறது !
ஆக, அல்பாயுசில் அல்லல்பட்டுச் சாகும் சைவர்களின் குத்தல் பேச்சை உதாசீனம் செய்து, அசைவத்தை நன்கு சுத்தம் செய்து, பூரணமாக வேக வைத்து உண்ணுங்கள். நோயின்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழுங்கள் !!!
No comments:
Post a Comment