Friday, November 16, 2018

சைவ உணவாளர்களைக் காட்டிலும், அசைவர்களே அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதாகச் சொல்கிறது ஆஸ்திரியாவின் க்ராஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு முடிவு !

சைவ உணவாளர்களைக் காட்டிலும், அசைவர்களே அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதாகச் சொல்கிறது ஆஸ்திரியாவின் க்ராஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு முடிவு !
சைவர்களுக்கு, கொழுப்புச் சத்து குறைபாடு மற்றும் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்வதால், கேன்சர், ஆஸ்துமா, அலர்ஜி, மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் அதிகமுண்டு என்கிறது ஆய்வறிக்கை !
அசைவர்களோடு ஒப்பிடும்போது, சைவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டதாக இல்லை. அதிக அளவில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வின் முடிவுகள் சைவர்களை புரட்டோ புரட்டு என்று புரட்டிப் போட்டுக்கொண்டே போகிறது ( நன்றி - தமிழ் இந்து 16/11/2018 வெள்ளி, பக்கம் எண் 7 )
ஆனா பாருங்க, நம்மூர்கள்ல இந்த அசைவர்களில் பெரும்பாலோர், உள்ளூரக் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையோடவே இருப்பாங்க, குறிப்பா பெண்கள் !
அதைப் பாவச்செயல்களா கருதி ஒரு குற்றவுணர்வு அவர்களை உறுத்திக்கிட்டே இருக்கும். அதனாலேயே, வாரத்துல அஞ்சு நாள், மாசத்துல 25 நாட்கள், வருஷத்துல புரட்டாசி, கார்த்திகைன்னு பல மாதங்கள், அசைவம் உண்ணாம தவிர்ப்பாங்க. சார்ந்தோரையும் மிரட்டி உண்ணச் செய்யாம பணிய வைப்பாங்க
சைவர்கள் என்னமோ தங்கள் உணவுதான் எந்த உயிரையும் துன்புறுத்துவதில்லைன்னு இவங்ககிட்ட சதா சொல்லிச் சொல்லி, அப்படி அவங்களச் செய்ய வைக்குது போல ? ஆக்ச்சுவலா சைவர்களின் பிரதான உணவான பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ் வகைகளுக்காக பல கோடி உயிரனங்கள் சாகும்வரை துன்புறுகின்றன என்பதுதான் பேருண்மை !
கமல் போன்ற முற்போக்கு முகமூடிகள் கூடச் சமயங்களில், சைவ உணவு சாந்தம், அசைவ உணவு மூர்க்கம் என உளறிக் கொட்டுமளவு, நோஞ்சான் சைவர்கள், அசைவர்களை மூளைச்சலவை செய்திருப்பதாகவே இதைக் காண முடிகிறது !
ஆக, அல்பாயுசில் அல்லல்பட்டுச் சாகும் சைவர்களின் குத்தல் பேச்சை உதாசீனம் செய்து, அசைவத்தை நன்கு சுத்தம் செய்து, பூரணமாக வேக வைத்து உண்ணுங்கள். நோயின்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழுங்கள் !!!

Sunday, November 11, 2018

தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?

தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?

ஆடு, கோழி, மீன், இறால் என தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பதற்கான எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
நாம் உண்ணும் இறைச்சி உடலுக்குப் பாதுகாப்பானதா... அவை தரமானதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒன்று. இறைச்சி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
இறைச்சியைப் பொறுத்தவரை, மக்களுக்கு அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லை என்பதே உண்மை. முதலில் இறைச்சி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
வெட்டப்படாத முழு இறைச்சியைச் சாதாரண வெப்பநிலையில் 2 மணி நேரம் வரை வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. குளிரூட்டப்பட்ட இடத்தில் (0 - 5 டிகிரி) இருந்தால் ஒருநாள் வைத்திருக்கலாம். அதனை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தவில்லையெனில், மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் (-18 முதல் -20 டிகிரி) பாதுகாக்க வேண்டும்.
அதிலிருந்து வெளியே எடுத்தவுடனேயே சமைக்கக் கூடாது. மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட இடத்தில் சில மணி நேரம் பாதுகாக்கப்பட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஓடும் நீரில் நன்றாகக் கழுவிவிட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருப்பதால் பலர் அதனை வெந்நீரில் சுத்தம் செய்கின்றனர். அது மிகவும் தவறு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருந்தால், அது பழைய இறைச்சி என்று நினைக்கிறார்கள். ஆனால், அதுவே பாதுகாக்கப்பட்ட இறைச்சி.
நல்ல கோழி இறைச்சியை எப்படி அறிவது?
இறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம், நிறைய இடங்களில் எடைக்காகத் தண்ணீரை சேர்க்கிறார்கள். இறைச்சி சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.
நன்றாக அழுத்திப் பார்த்தால், உள்ளே அமுங்கி சிக்கன் உடையக் கூடாது. மேற்புறங்களில் பச்சை நிறப் படிவங்கள் இருக்கக் கூடாது.
ஆட்டு இறைச்சி கண்டறிவது எப்படி?
இறைச்சி பழையதாக இருந்தால் அழுத்தித் தொடும்போது உடையும். சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.
பழுப்பு நிறத்தில் இருந்தால் அது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர வேண்டும். இறைச்சியில் அதிக வழுவழுப்புத் தன்மை இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல.
மீன் உணவு எவ்வாறு கணிப்பது?
மீன் கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தால், எதிரே பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பாதுகாப்பான மீன். செவுள்களில் சிவந்த நிறம் இருக்க வேன்டும். நீல நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருந்தால், அது உணவுக்கு ஏற்ற மீன் உணவு அல்ல.
வயிற்றுப் பகுதியிலோ துடுப்புப் பகுதியிலோ காயங்கள் இருந்தால், அதனைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எப்போதும் குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இறால்மீன் உணவு எப்படிக் கண்டறிவது ?
இறாலில் குடற்பகுதி அகற்றி இருக்க வேண்டும். தலைப் பகுதியில் மஞ்சள் நிற பொட்டுக்கள் இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வழுவழுப்புத் தன்மை இருக்கக் கூடாது.

Maalai Malar News..

Thursday, November 1, 2018

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள், ஆண்கள் முழுசா படிச்சு தெரிஞ்சுகோங்க

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள், ஆண்கள் முழுசா படிச்சு தெரிஞ்சுகோங்க




01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.