கேள்வி - அதிகாலையில் எழுந்தால் நல்லது என்று எனக்கும் தெரிகிறது. ஆனால் நான் பார்க்கும் வேலை அதற்குத் தோதாக இல்லை. என்னால் அதிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. இதனால் எனக்குக் கிடைக்காமல் போகின்ற விஷயங்களை வேறு ஏதேனும் வழிகளில் பெற்றுக் கொள்ள முடியுமா ?
இராம் மனோகர் - அதற்கு வாய்ப்பே இல்லை. நண்பர் ஒருவர் இரவு முழுவதும் விழித்திருந்து, வேலை செய்து விட்டு அதிகாலையில் யோகாசனம், தியானம் எல்லாம் செய்கிறேன். எனினும் உடலும், மனமும் சோர்வாகவே இருக்கிறது. கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது. உடல் அதிக உஷ்ணமாக இருக்கிறது. கண்களில் எரிச்சலாக இருக்கிறது, என்ன செய்யலாம் ? என்று கேட்டார். அந்த வேலையை விட்டு விடுங்கள். ஊதியம் சற்று குறைவாகி விட்டாலும் பரவாயில்லை, வேறு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொன்னேன். ஒருபோதும் நம் வாழ்க்கை வசதிக்காக இயற்கையின் திட்டங்களை மாற்றியமைத்திட முடியாது. பண்டைய காலங்களில் மாலை ஆறு மணிக்கே அலுவல்களை நிறுத்தி விட வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஏனெனில் மின்சாரம் வசதி இல்லை. குறைவான வெளிச்சத்திலேயே அவர்கள் உறங்கும் வரை வேலைகளைச் செய்ய வேண்டியதிருந்தது. அதிகாலை நாலு மணிக்கே எழுந்து அவர்கள் கடமைகளைச் செய்யும் பொழுதும் கூட வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும். எனவே பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் பார்வை குறைபாடு ஏற்பட்டதேயில்லை.
இன்றைக்கு நிலைமை வேறு. பகலை விட இரவு வெளிச்சமாகத் தெரிகிற அளவு மின் விளக்குகள் வந்து விட்டன. இதனால் கண்களில் குறைபாடு ஏற்படுவதோடு, உடலிலும் அதிக உஷ்ணம் ஏறி பலவிதமான நோய்கள் வந்து விடுகின்றன. வாழ்க்கை நவீனமயமாகும் அளவு மனிதன் இயற்கையின் ஆற்றல்களை இழந்து விடுவதோடு, தன் ஆயுளையும், ஆரோக்யத்தையும் கெடுத்துக் கொள்கிறான். மனிதன் நன்றாக உழைக்க வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு அந்த உழைப்பே அவனுக்கு ஆக்கமாகவும் அமைய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையாக உழைக்கிற மனிதன் முன்னேற்றமடைகிறான். முறை தவறி உழைக்கிற மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான். இதை கருத்தில் கொள்ள வேண்டும். முறை தவறி உழைப்பவன் மன அமைதியை இழக்கிறான், உடல் வலிமையை இழக்கிறான், மக்களோடு கொள்ளும் இணக்கத்தை இழக்கிறான், வெறும் பணம் தேடும் இயந்திரமாக ஆகி விடுகிறான். எனவே அவன் வாழ்க்கையின் பயனை அறியாத உழைப்பாளியாக ஆகிறான்.
பகல் என்பது உழைப்பதற்காகவும், இரவு என்பது ஓய்வு மற்றும் உறக்கத்திற்காகவும் என்பதே இயற்கையின் திட்டமாகும். நம் உள்ளுறுப்புகளுக்கு பகலை விட இரவில்தான் அதிக வேலை இருக்கிறது. அப்பொழுது நாம் ஓய்வு கொள்வது மிகமிக அவசியமாகும். அந்த நேரத்தில் நாம் விழித்திருந்து வேலை செய்யும் பொழுது உள்ளுறுப்புகள் இயங்குவதற்குப் போதுமான சக்தி கிடைக்காமல் போய் விடுகின்றது. ஓய்வு எடுக்கா விட்டால் இரவில் மட்டும் சுரக்கின்ற சுரப்பு நீர்கள் சுரக்காமல் போய் விடுகின்றன. இதனால் ஆரோக்யம் கெடுவதுடன், மூளையின் செயல் திறன் குறைந்து அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. முக்கியமாக ஆன்மீக சாதகர்களுக்கு அதிகாலை ப்ரம்ம முகூர்த்தமே உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நோயாளியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருக்கக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். அதிகாலையில் தெளிந்த மனதுடன் விழித்தெழுவதற்காக முன்னிரவிலேயே மனிதன் படுத்து உறங்குவது அவசியமாகும்.
எனவே இரவு பத்து மணிக்காவது உறங்கி விடுவது நல்லது. அப்பொழுதுதான் ஐந்து மணிக்கெல்லாம் விழித்தெழுந்து இயற்கை தாய் நமக்களித்துள்ள வசதிகளை எல்லாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆறு மணி நேரம் ஆழ்ந்து உறங்கினாலே போதுமானதுதான். இவ்வாறு அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் நமது எல்லா விதமான முன்னேற்றத்திற்கும் துணை புரிகின்றது. காலை சூரிய உதயத்தின் போது தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தமோ குணம் அதிகரிக்கும். ஒரு மாதம் அதிகாலையில் விழித்தெழுந்து நமது நித்திய கடமைகளைச் செய்து பார்த்தோம் என்றால், அதன் பயனும் சிறப்பும் நமக்கு விளங்க வரும். உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றத்தை நாம் நன்கு உணர முடியும். சூழ்நிலை எதுவாகினும் அதை நம் வாழ்க்கைக்கு உகந்ததாக அமைத்துக் கொள்வதே சிறப்பு. எனவே எத்தகைய சூழலிலும் அதிகாலையில் விழித்தெழுவது என்கிற பழக்கத்தை பறிகொடுத்து விடக் கூடாது. நாம் செய்கிற தொழில்கள் நம் நல்வாழ்விற்கு உற்ற துணையாக இருக்க வேண்டுமேயல்லாது, நமது உயிரைக் கெடுக்கும் எமனாக இருக்கக் கூடாது. என்றும் வைகறையில் துயிலெழுந்து பரம்பொருளை தியானித்து உய்வோமாக
இராம் மனோகர் - அதற்கு வாய்ப்பே இல்லை. நண்பர் ஒருவர் இரவு முழுவதும் விழித்திருந்து, வேலை செய்து விட்டு அதிகாலையில் யோகாசனம், தியானம் எல்லாம் செய்கிறேன். எனினும் உடலும், மனமும் சோர்வாகவே இருக்கிறது. கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது. உடல் அதிக உஷ்ணமாக இருக்கிறது. கண்களில் எரிச்சலாக இருக்கிறது, என்ன செய்யலாம் ? என்று கேட்டார். அந்த வேலையை விட்டு விடுங்கள். ஊதியம் சற்று குறைவாகி விட்டாலும் பரவாயில்லை, வேறு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொன்னேன். ஒருபோதும் நம் வாழ்க்கை வசதிக்காக இயற்கையின் திட்டங்களை மாற்றியமைத்திட முடியாது. பண்டைய காலங்களில் மாலை ஆறு மணிக்கே அலுவல்களை நிறுத்தி விட வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஏனெனில் மின்சாரம் வசதி இல்லை. குறைவான வெளிச்சத்திலேயே அவர்கள் உறங்கும் வரை வேலைகளைச் செய்ய வேண்டியதிருந்தது. அதிகாலை நாலு மணிக்கே எழுந்து அவர்கள் கடமைகளைச் செய்யும் பொழுதும் கூட வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும். எனவே பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் பார்வை குறைபாடு ஏற்பட்டதேயில்லை.
இன்றைக்கு நிலைமை வேறு. பகலை விட இரவு வெளிச்சமாகத் தெரிகிற அளவு மின் விளக்குகள் வந்து விட்டன. இதனால் கண்களில் குறைபாடு ஏற்படுவதோடு, உடலிலும் அதிக உஷ்ணம் ஏறி பலவிதமான நோய்கள் வந்து விடுகின்றன. வாழ்க்கை நவீனமயமாகும் அளவு மனிதன் இயற்கையின் ஆற்றல்களை இழந்து விடுவதோடு, தன் ஆயுளையும், ஆரோக்யத்தையும் கெடுத்துக் கொள்கிறான். மனிதன் நன்றாக உழைக்க வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு அந்த உழைப்பே அவனுக்கு ஆக்கமாகவும் அமைய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையாக உழைக்கிற மனிதன் முன்னேற்றமடைகிறான். முறை தவறி உழைக்கிற மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான். இதை கருத்தில் கொள்ள வேண்டும். முறை தவறி உழைப்பவன் மன அமைதியை இழக்கிறான், உடல் வலிமையை இழக்கிறான், மக்களோடு கொள்ளும் இணக்கத்தை இழக்கிறான், வெறும் பணம் தேடும் இயந்திரமாக ஆகி விடுகிறான். எனவே அவன் வாழ்க்கையின் பயனை அறியாத உழைப்பாளியாக ஆகிறான்.
பகல் என்பது உழைப்பதற்காகவும், இரவு என்பது ஓய்வு மற்றும் உறக்கத்திற்காகவும் என்பதே இயற்கையின் திட்டமாகும். நம் உள்ளுறுப்புகளுக்கு பகலை விட இரவில்தான் அதிக வேலை இருக்கிறது. அப்பொழுது நாம் ஓய்வு கொள்வது மிகமிக அவசியமாகும். அந்த நேரத்தில் நாம் விழித்திருந்து வேலை செய்யும் பொழுது உள்ளுறுப்புகள் இயங்குவதற்குப் போதுமான சக்தி கிடைக்காமல் போய் விடுகின்றது. ஓய்வு எடுக்கா விட்டால் இரவில் மட்டும் சுரக்கின்ற சுரப்பு நீர்கள் சுரக்காமல் போய் விடுகின்றன. இதனால் ஆரோக்யம் கெடுவதுடன், மூளையின் செயல் திறன் குறைந்து அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. முக்கியமாக ஆன்மீக சாதகர்களுக்கு அதிகாலை ப்ரம்ம முகூர்த்தமே உகந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நோயாளியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருக்கக் கடமைப்பட்டவர்களாகிறார்கள். அதிகாலையில் தெளிந்த மனதுடன் விழித்தெழுவதற்காக முன்னிரவிலேயே மனிதன் படுத்து உறங்குவது அவசியமாகும்.
எனவே இரவு பத்து மணிக்காவது உறங்கி விடுவது நல்லது. அப்பொழுதுதான் ஐந்து மணிக்கெல்லாம் விழித்தெழுந்து இயற்கை தாய் நமக்களித்துள்ள வசதிகளை எல்லாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆறு மணி நேரம் ஆழ்ந்து உறங்கினாலே போதுமானதுதான். இவ்வாறு அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் நமது எல்லா விதமான முன்னேற்றத்திற்கும் துணை புரிகின்றது. காலை சூரிய உதயத்தின் போது தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தமோ குணம் அதிகரிக்கும். ஒரு மாதம் அதிகாலையில் விழித்தெழுந்து நமது நித்திய கடமைகளைச் செய்து பார்த்தோம் என்றால், அதன் பயனும் சிறப்பும் நமக்கு விளங்க வரும். உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றத்தை நாம் நன்கு உணர முடியும். சூழ்நிலை எதுவாகினும் அதை நம் வாழ்க்கைக்கு உகந்ததாக அமைத்துக் கொள்வதே சிறப்பு. எனவே எத்தகைய சூழலிலும் அதிகாலையில் விழித்தெழுவது என்கிற பழக்கத்தை பறிகொடுத்து விடக் கூடாது. நாம் செய்கிற தொழில்கள் நம் நல்வாழ்விற்கு உற்ற துணையாக இருக்க வேண்டுமேயல்லாது, நமது உயிரைக் கெடுக்கும் எமனாக இருக்கக் கூடாது. என்றும் வைகறையில் துயிலெழுந்து பரம்பொருளை தியானித்து உய்வோமாக